ரமலான் நோன்பு நாள் -16 ஜெபக்குறிப்புகள்

ஆபிரிக்கா நோக்கி – தெற்கில் மீளச் சரிசெய்தல்

தற்போது தென்னாபிரிக்காவிலுள்ள இஸ்லாமியரின் சனத்தொகையானது 6 இலட்சம் முதல் 8 இலட்சம் இடையிலே காணப்படுகிறது., மொத்த சனத்தொகையிலே ஒரு சதவீதத்தை காட்டிலும் குறைவாக காணப் பட்டாலும், தேசத்திலே இஸ்லாமியரின் வளர்ச்சி மற்றும் தாக்கமானது சவால்களையும் சந்தர்ப்பத்தையும் பெற்று கொடுக்கிறது.

தென்னாபிரிக்காவிலே ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தினர் மத்தியிலே இஸ்லாமானது மிகவும் பலமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலே ஒரு குழு சிறைச்சாலையிலே வசிப்போராவர். சிறைக்கைதிகள் குற்ற மனசாட்சியிலிருந்து மன்னிப்பை எதிர்பார்த்துஎதிர்ப்பின் எந்த செய்தியானாலும் அதற்கு திறந்தவர்களாக காணப்படுவார்கள். கிறிஸ்துவின் செய்தி எங்கே பிரசங்கிக்கப்படவில்லையோ, அங்கே ஒரு விடயம் ஸ்தலத்தை நிரப்பிவிடும்.

இஸ்லாமானது பின்தங்கிய கருப்பு ஆபிரிக்கர்கள் மத்தியிலே மிகவும் கவரக்கூடியதாக உள்ளது. சிலவேளை கிறிஸ்தவமானது ‘வெள்ளையரின்’ மதமாக நினைக்கப்படுகிறது. ஏழைகளுக்கு அவசியமான நல்ல கல்வி மற்றும் போசாக்கு போன்றவற்றை கொடுத்து இஸ்லாம் அவர்கள் மத்தியிலே இயற்கையாகவே நற்கீர்த்தியுடன் கட்டியெழுப்பியுள்ளது.

தென்னாபிரிக்காவிலே வல்லமையாக விசுவாசத்திற்கு தடையான செய்தியொன்று கடந்துசென்றுள்ளது.
சரித்திர காரியங்கள் நிமித்தம் கடந்தகால பிரிவினைகள் மற்றும் போலியான உபதேசங்களினிமித்தம் இது நடைபெற்றுள்ளது. இறையியல் விவாதங்களானது ஒரே சிருஷ;டிகரையே நாம் நமஸ்கரிக்கிறோம் என்று ஜனங்கள் கேட்ட போது அவர்கள் இஸ்லாமிற்கு மிகவும் சீக்கிரமாக வாசல்களை திறக்கிறார்கள்.

தற்போது தென்னாபிரிக்காவிலே கிறிஸ்தவத்தை காட்டிலும் இஸ்லாம் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டு செல்கிறது அது சதவீத வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே நடைபெறு கிறது, அது
சபைக்கு சவாலாக உள்ளது. இஸ்லாம் மற்றும் ஏழைகளுக்கு கிட்டி சேருவது தொடர்பான வேதாக
ரீதியான பிரதிகிரியையானது சபையானது அதனை காட்டிலும் அதிகமாக செய்யவும் பிரயாசப்படவும்
உள்ளது.

day16

ஜெப குறிப்புகள்

தென்னாபிரிக்க இஸ்லாமியரை சந்திக்கும்படியாக செல்பவர்களுக்காக ஜெபம் செய்யவும். இக்காலத்திலே அவர்கள் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும், மத பயிற்சிக்கும் இசைவாக காணப்படவும் அச்சத்தியத்தை இயேசு கிறிஸ்துவுடன் ஒப்பிடாதிருக்கும் படியாக ஜெபம் செய்வோம்.

தென்னாபிரிக்க சிறைச்சாலையிலே அதிகளவு கிறிஸ்தவ தலைவர்கள் வேண்டும் என்று ஜெபம் செய்வோம். ரமதான் மாதத்திலே அவர்கள் அதிகளவு சிறைச்சாலை ஊழியங்களிலே அவதானத்தை திருப்புவர் காரணம், அப்போது அவர்கள் தெளிவான எழுத்து பலகையை போல அல்லாஹு முன்பாக காணப்படுவார்கள் என்றும் அதினிமித்தம் அவர்களை இலகுவாக இஸ்லாமிற்கு திருப்பிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்.

கடினமான முகாம்களிலே வாழ்ந்து உணவை பெற்றுக் கொள்ளும்படியாக இஸ்லாமை தழுவுகிற ஜனத்தினருக்காக ஜெபம் செய்வோம். இந்த ஏழை ஜனத்தினர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெபியுங்கள் காரணம் அவர்கள் உணவை மாத்திரம் பெற்றுக்கொள்கிறவர்களாய் இராது கிறிஸ்துவுக்குள் புது ஜீவனை பெறும் படியாக அமைய வேண்டும் என்று ஜெபியுங்கள்.

 
பின்தங்கிய பகுதியிலே பயிற்சி பெறாத மேய்ப்பருக்காக அவர்கள் விசுவாசத்திலே அசைக்கப்படாது காணப்படும்படியாக ஜெபம் செய்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.