கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு ஒரு விசயத்தை பற்றி நாம் சொல்லும்போது அதை சரியாக விளங்கி சொல்லாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைதான் இந்த கட்டுரை மூலம் சொல்லபோகிறேன்.
குர்ஆனை பொருத்தவரை பைபிளின் சம்பவங்களை பல இடங்களில் மாற்றி சேர்க்கப்பட்ட பல வார்த்தைகளோடு சொல்லப்பட்டவையாகும்.அதனால் இரண்டும் இருக்கும் ஒற்றுமை என்று நாம் எதையுமே சொல்லமுடியாது.குர்ஆனில் சில இடங்களில் தொடக்கம் பைபிளில் உள்ளது போல இருக்கும்.ஆனால் முடிவில் அது வேறு மாதிரி முற்றுபெறும்.சில வசனங்கள் பைபிளில் உள்ளவற்றுக்கு மாற்றமாக எங்கோ தொடங்கி முடியும் போது வேதாகம சம்பவங்களுக்கு ஒத்துபோகும் வகையில் இருக்கும்.
இன்றைக்கு பைபிளுக்கும் ,குர்ஆனுக்கும் இடையே ஒன்று போல இருக்கும் ஒரு வசனத்தையும்,பைபிளில் சொல்லப்பட்ட வசனத்தின் அர்த்தம் எதை குறிப்பிடுகிறது என்றும், குர்ஆனில் சொல்லப்பட்ட வசனத்தில் ஏற்படும் அபத்தமும்,அதனால் இன்றைக்கு இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல்களும் ,அதற்கு விளக்கம் கொடுக்க அவர்கள் படும் பாடுகளும் கொஞ்சம் உங்களுக்கு எடுத்துக்காட்ட முயற்சி செய்கிறோம்.
பைபிள் வசனங்கள்
எபிரெயர் 1 :1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
3. இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
4. இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.
5. எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
6. மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.
குர்ஆன் வசனங்கள்
2:34 ‘ஆதமுக்குப் பணியுங்கள்!’ என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.
7:11 உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் ”ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.
17:61’ஆதமுக்குப் பணியுங்கள்!’ என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். ‘களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?’ என்று அவன் கேட்டான்.
18:50 ‘ஆதமுக்குப் பணியுங்கள்!’ என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்.
20:116 ‘ஆதமுக்குப் பணியுங்கள்! என்று வானவர்களிடம் நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.
பைபிள் என்ன சொல்லுகிறது
மேலே குறிப்பிடப்பட்ட பைபிள் மற்றும் குர்ஆனின் வசனங்களை வாசித்திருப்பீர்கள்.இதில் பைபிளின் வசனம் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டது.அடுத்து குர்ஆனின் வசனம் ஆறாம் நூற்றாண்டில் முஹம்மது அவர்கள் மூலம் சொல்லப்பட்டவை.இந்த இரண்டு புத்தகங்களின் வசனப்பகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட விசயம் சொல்லப்படுகிறது.
எபிரேயர் முதல் அதிகாரத்தை நாம் வாசிப்போமானால் அது இயேசு கிறிஸ்துவை பற்றி சொல்லுகிறது என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஆனால் முதலாவது பைபிளில் இந்த வசனம் குறிப்பிடப்படும் பொழுது இயேசு கிறிஸ்து என்று பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். இன்னும் கீழே உள்ள வசனத்தையும் நாம் காணலாம்.
ரோமர் 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே முதற்பேறானவர் என்று அழைக்கப்பட்டுள்ளார்.அவரை உலகத்தில் பிரவேசிக்க செய்த பொழுது தேவதூதர்கள் அவரை தொழுதுகொள்ள வேண்டும் என்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
பைபிளில் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் பிரவேசித்த பொழுது தேவதூதர்கள் அவரை தொழுதுகொள்ளும் படி பிதாவகிய தேவன் சொன்னதை அங்கு வெளிப்படுத்தி இயேசு கிறிஸ்து எப்படி தொழுகைக்கு உரியவர் என்பதை அழகாக அப்போஸ்தலர்கள் மூலம் ஆண்டவர் விளக்கியுள்ளார்.ஆம் இயேசு கிறிஸ்து திரியேக தேவனில் ஒரு ஆள்தத்துவமாக இருக்கிற படியால் அவரை தொழுதுகொள்ள வேண்டும் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வசனம் அழகாக கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக இன்னும் ஒரு விளக்கமும் பைபிள் நமக்கு தருகிறது.
I கொரிந்தியர்
15 :45. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
47. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
இயேசு கிறிஸ்துவை,ஆதாமுக்கு ஒப்பிடப்பட்டுள்ளதை மேலே உள்ள வசனத்தில் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
குர்ஆன் என்ன சொல்லுகிறது.
ஆனால் மேலே குர் ஆனில் சொல்லப்பட்ட வசனங்கள் ஆதாமை படைத்து தேவ தூதர்களை பார்த்து அல்லாஹ் ஆதாமை வணங்கும்படி சொன்னதாக சொல்கிறது.மொழிபெயர்ப்பில் பணியுங்கள் என்று மொழிபெயர்த்தாலும் அரபியில் அவை வணங்குங்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது.
கீழே உள்ள குர் ஆன் வசனத்தை பாருங்கள்.
53:62 அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்!
41:37 இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகி யவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய் யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்கு வோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!
மேலே உள்ள இரண்டு வசனங்களிலும் ஸஜ்தா என்ற வார்த்தை வருவதை காண்பீர்கள்.இதன் அரபி மொழியில் ஆங்கிலத்தில் எழுதிய வசனங்களை கீழே தருகிறேன்.
Transliteration 41:37: | Wamin ayatihi allaylu waalnnaharu waalshshamsu waalqamaru la tasjudoo lilshshamsi wala lilqamari waosjudoo lillahi alathee khalaqahunna in kuntum iyyahu taAAbudoona |
|
இந்த இரண்டு வசனங்களிலும் சுஜூத் என்ற வார்த்தை இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.இதே வார்த்தைதான் ஆதாமுக்கு பணியுங்கள் என்ற வசனத்திலும் உள்ளது.கீழே அந்த வசனத்தை பாருங்கள்.
Al-Baqara [2:34] | Waith qulna lilmalaikati osjudoo liadama fasajadoo illa ibleesa aba waistakbara wakana mina alkafireena |
Al-Araf [7:11] | Walaqad khalaqnakum thumma sawwarnakum thumma qulna lilmalaikati osjudoo liadama fasajadoo illa ibleesa lam yakun mina alssajideena |
Al-Isra [17:61] | Waith qulna lilmalaikati osjudoo liadama fasajadoo illa ibleesa qala aasjudu liman khalaqta teenan |
Al-Kahf [18:50] | Waith qulna lilmalaikati osjudoo liadama fasajadoo illa ibleesa kana mina aljinni fafasaqa AAan amri rabbihi afatattakhithoonahu wathurriyyatahu awliyaa min doonee wahum lakum AAaduwwun bisa lilththalimeena badalan |
Taha [20:116] | Waith qulna lilmalaikati osjudoo liadama fasajadoo illa ibleesa aba |
மேலே உள்ள அனைத்து வசனங்களிலும் சுஜூத் என்ற வார்த்தை இருப்பதை காணலாம்.இவை ஸஜ்தா என்ற மூலச்சொல்லில் இருந்து வந்த வார்த்தையாகும்.
இன்னும் மவ்லவி பிஜே அவர்கள் இந்த வசனத்துக்கு கொடுத்துள்ள விளக்க உரையில் என்ன சொல்லியுள்ளார் என்பதை கீழே வாசிக்கலாம்.
மவ்லவி பிஜே அவர்களின் விளக்கம்
///
பணியுங்கள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் ஸஜ்தா எனும் மூலச் சொல் இந்த வசனங்களில் (2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸஜ்தா என்ற சொல்லுக்கு காலில் விழுதல் என்ற பொருளும், பணியுதல் என்ற பொருளும் உள்ளது.
////
இங்கு என்ன பிரச்சனை என்றால் இறைவனுக்கு மட்டுமே பணிய வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய வார்த்தையாக உள்ளதை மேலே உள்ள 53:62 வசனத்தில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம்.அப்படி இருக்கும் பொழுது ஆதாமுக்கு ஏன் தேவதூதர்களை பணிந்துகொள்ள சொன்னார் அல்லாஹ் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
மனிதர்களை வணங்குவதற்கு இஸ்லாமில் அனுமதி உண்டா?இல்லை என்பது பெரும்பாலான இஸ்லாமியர்களின் கருத்தாகும்.அப்படியானால் ஏன் தேவதூதர்கள் ஆதாமை வணங்கவேண்டும்?
மனிதர்களை வணங்கலாமா?
சரி பைபிளை பொருத்தவரை அதிகாரத்துக்கு மேட்பட்டவர்களை மதிப்புக்குரியவர் என்ற காரணத்திற்காக மட்டும் வணங்குவதில் தவறு இல்லை.ஏன் என்றால் அது தடை செய்யப்படவில்லை.ஆனால் கடவுளுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை எந்த மனிதனுக்கும் கொடுக்கவும் கூடாது எந்த மனிதரும் அதை ஏற்றுகொள்ளவும் கூடாது என்பதை பைபிளின் பல வசனங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.உதாரணத்திற்கு பைபிளில் சில சம்பவங்கள் நடைபெற்றதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன்.
அப்போஸ்தலர் 10 :25. பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
26. பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
அப்போஸ்தலர் 14 :12. பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.
13. அல்லாமலும் பட்டணத்துக்குமுன்னே இருந்த யூப்பித்தருடையகோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
14. அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்
15. மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
இந்த இரண்டு வேதப்பகுதிகளிலும் நம்முடைய அப்போஸ்தலர்கள் பேதுரு,பவுல் ,பர்னபா ஆகியோருடைய ஊழியப்பாதைகளில் நடைபெற்ற சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளது.இந்த இரண்டு வேதப்பகுதிகளிலும் நம் அப்போஸ்தலர்கள் தங்களை தாழ்த்தி வணங்குவதற்கும்,ஆராதிப்பதற்கும் உரியவர் கடவுள் மட்டுமே என்பதை தெளிவாக அங்கு சொல்லுவதை நாம் அறிந்துகொள்ளலாம்.மேலும் சில வசனங்களை நான் வாசிக்கலாம்.
வெளி 19:10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
வெளி 22:8 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனைவணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். 9. அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.
இங்கும் அப்போஸ்தலனாகிய யோவான் தன்னோடு பேசிய தேவதூதர்களை கண்டவுடன் தவறுதலாக அவர்களை வணங்க முற்பட்டபோது தேவதூதர்களும் தாங்கள் தொழுதுகொள்வதற்கும்,ஆராதனைக்கும் தகுதியானவர்கள் இல்லை என்பதை சொல்லி எச்சரிப்பதை பார்க்கிறோம்.இதிலிருந்து நாம் தெளிவாக புரிந்துகொள்ளுகிறோம் கடவுளுக்கு கொடுக்கவேண்டிய தொழுகையை மனிதர்களுக்கோ,அல்லது தேவதூதர்களுக்கோ எந்த காரணத்தை கொண்டும் நாம் கொடுத்துவிடக்கூடாது என்பதை.
ஆனால் குர் ஆனை பொருத்தவரை ஆதாமை அல்லாஹ் வணங்கும்படி தேவதூதர்களுக்கு கட்டளையிட்டார் என்று சொல்லப்படுவதில் இவர்களின் தவ்ஹீத் வீழ்ச்சியடைகிறது.தவ்ஹீத் என்றால் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி,அவனுக்கு கட்டுப்படுவது என்று பலர் சொல்லுவதை கேட்டுள்ளேன்.உடனே இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வார்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டுவது என்றால் அவர் ஆதாமை வணங்கு என்று சொன்னால் வணங்குவது உட்பட்டதுதான் என்பார்கள்.அதைபற்றி கொஞ்சம் பார்ப்போம்.
பைபிள் வெண்கல சிலையை வணங்க சொல்லுகிறதா?
சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் தூத்துக்குடியில் நடைபெற்ற விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த நண்பர் சொல்லுகிறார் அல்லாஹ் வணங்கு என்று சொன்னால் வணங்கிவிட்டு போகவேண்டியதுதான் என்கிறார்.அப்படியானால் சிலைகளை வணங்கும் மக்களும் அதை ஆதாரமாக காட்டி எங்கள் கடவுள் சிலையை வணங்கச் சொன்னதால் நாங்கள் வணங்குகிறோம் என்று சொல்லிவிடுவார்களே.அடிப்படையே தகர்த்துவிடக்கூடிய ஒரு விளக்கத்தை தருகிறீர்களே.அல்லாஹ் வணங்கச்சொன்னால் எதை வேண்டுமானாலும் வணங்கலாமா?அப்படி வணங்கச்சொன்னால் அவர் இறைவனா? அந்த நண்பர் இந்த ஆதாம் வணக்கம் தொடர்பான கேள்விக்கு பைபிளில் வெண்கல சர்பத்தை நோக்கிபார்க்க சொன்ன சம்பவத்தை இணைத்து பதில் சொல்லுகிறார்.அந்த வசனங்களில் எங்கும் வெண்கல சர்பத்தை வணங்கும்படி இறைவன் சொல்லவில்லை.அதை நோக்கிபார்க்கத்தான் சொல்லியுள்ளார் என்பதை அந்த நண்பர் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
எண்ணாகமம்
21:8. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.
9. அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.
இதில் எங்குமே அந்த வெண்கல சர்பத்தை வணங்கவேண்டும் என்று இல்லை.கிறிஸ்தவ சகோதரர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எதையோ எடுத்து உளருகிறதை பார்க்கிறோம்.மேலும் யாத்திராகமத்தின் வசனத்தை ஆதாரம் காட்டி எந்த சிலைகளும் செய்யகூடாது என்கிறார்.நண்பரே எங்களுக்கு சிலைகளை கடவுள்களாக வணங்கத்தான் தடை உள்ளது என்பதை அறிந்துகொள்ளவும்.
பின் நாட்களில் கடவுள் நோக்கிபார்க்க சொன்ன வெண்கல சர்பம் சிலை வணங்கப்பட்ட போது அதை உடைத்துபோடுகிறதையும் எங்கள் வேதாகமம் சொல்லுகிறது.இதை அந்த நண்பர் சரியாக வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
II இராஜாக்கள் 18:4 அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
இந்த வீடியோவை பாருங்கள்.
என்ன நண்பர்களே கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்தித்துபாருங்கள்.அல்லாஹ்வை தவிர வணக்கத்துக்குரியவன் யாரும் இல்லை என்று சொல்லும் நீங்கள் அல்லாஹ் சொன்னால் யாரையும் வணங்குவோம் என்று சொல்லுவது முரண்பாடாக இல்லையா? மனிதர்கள் செய்ய கூடாது என்று சொல்லும் மிகக்கேவலமான தவறை இறைவன் மனிதர்களை பார்த்து செய்யசொல்லுவான் என்று சொல்லுகிறீர்களே.இது எந்த வகையிலும் நியாயமாக முடியுமா?கொஞ்சம் நிதானமாக சிந்தியுங்கள்.இதன் விளைவு என்ன தெரியுமா?இந்த வசனத்துக்கு விளக்கமாக இஸ்லாமிய அறிஞர்களில் பலரும் பலதை சொல்லுகிறார்கள்.கீழே உள்ள மவ்லவி பிஜே அவர்கள் விளக்கியுள்ள விளக்கவுரையில் எழுதப்பட்டுள்ள சிலதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த வசனத்துக்கு பல இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் கருத்தை பிஜே அவர்கள் மறுக்கிறார்.
// ///இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
//////
மவ்லவி பிஜே அவர்கள் மற்றவர்களை வணங்கலாமா?கூடாதா என்பதற்கு கொடுக்கும் விளக்கம்..(தேவையானவை மட்டும் இங்கு பதிவு செய்யபடுகிறது)
நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது. காரணம் ஸஜ்தாச் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர். “பெரியவர்களுக்குச் ஸஜ்தா செய்யுங்கள்” என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாகத் தடை விதித்துள்ளனர். படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தாச் செய்யக் கூடாது. படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. முஆத் (ரலி), ஸல்மான் (ரலி) போன்ற நபித் தோழர்கள் தமக்கு ஸஜ்தாச் செய்ய முன் வந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர். மனிதனுக்கு மனிதன் ஸஜ்தாச் செய்யக் கூடாது என்று பிரகடனப்படுத்தி விட்டனர்.
(நூல்கள்: திர்மிதி 1079, இப்னுமாஜா 1843, அஹ்மத் 12153, 18591, 20983, 23331)
இவ்வாறு நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல்படுத்த முடியாது. பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் கால்களில் விழுவதையும், அவர்களுக்கு ஸஜ்தாச் செய்வதையும் இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.///
இஸ்லாமிய அறிஞர்கள் வாதம் சரியானதா?
இதுதான் மவ்லவி பிஜே அவர்கள் சொல்லும் விளக்கம் ஆகும்.பாருங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் இந்த வசனத்தை விளக்கம் எவ்வளவு தடுமாறுகிறார்கள் என்று பாருங்களேன்.சாதாரணமாக அறிந்தவண்ணம் சர்வ வல்லமை உள்ள கடவுள் ஏன் சாதாரண மனிதனை தேவதூதர்கள் வணங்கும்படி சொன்னார் என்ற காரணம் சரியாக சொல்ல முடியவில்லை.அதனால் தான் கடவுள் வணங்கச்சொன்னால் வணங்கவேண்டும் என்கிறார்கள்.அல்லாஹ்வை தவிர யாரையும் வணங்கக்கூடாது என்கிறவர்கள் அல்லாஹ் தேவதூதர்களை ஆதமை வணங்கச்சொல்லி சொன்னார் என்று சொல்லுவது எவ்வளவு பெரிய முரண்பாடு என்பதை இவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்
முடிவுரை
பைபிளிலும் கடவுள் தேவதூதர்களை வணங்கச்சொன்னார் என்று உள்ளது.குர்ஆனிலும் கடவுள் தேவதூதர்களை வணங்கச்சொன்னார் என்று உள்ளது.பைபிள் முதல் பேறானவரை வணங்கச்சொன்னார் என்று சொல்லுகிறது.குர்ஆன் முதல் மனிதரை வணங்கச்சொன்னார் என்று உள்ளது.ஆனால் ஒரே வித்தியாசம் பைபிள் சொல்லும் முதல் பேறானவர் வானத்தில் இருந்து பூமிக்கு வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.குர்ஆன் சொல்லும் முதல் மனிதர் ஆதாம் கடவுளின் கட்டளைக்கு கீழ்படியாமல் மனித குலத்துக்கு சாபம் வர காரணமானவர் என்று கருதப்பட்ட சாதாரண விழுந்துபோன மனிதர். நண்பர்களே நாம் சிந்திக்கும் பொழுது நமக்கு விளங்குவது என்ன வென்றால் பைபிளில் எபிரேயர் 1:6 வசனத்தில் சொல்லப்பட்ட முதற்பேறனவர் யார் என்று அறியாமல்,முதலில் வந்தவர் ஆதாம் என்று புரிந்துகொள்ளப்பட்டு தவறாக அதை மக்களுக்கு போதித்ததால் தான் இது போன்ற அபத்தங்கள் வந்துள்ளது என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு குர்ஆனை படிக்கும் பொழுது ஏற்படும் நியாயமான கேள்வியாகும்.
அன்புக்குரிய சகோதரர்களே,
அற்புதமான விளக்கம் நம் சகோதரர் அளித்துள்ளார், அதற்க்கு பலம் சேர்க்கும் விதமாக இங்கு நாம் இன்னொரு விசயத்தையும் புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ் இப்லீஸை ஆதாமுக்கு பணிய சொல்லும்போது, இப்லீஸ் ஒரு நல்ல தூதனாக தான் இருந்திருக்கிறான் என்று தோன்றுகிறது, இதற்க்கு பின்பு தான் அவன் ஷைத்தானாக மாறியிருக்கிறான். ஆக மனிதனை படைத்த பிறகு தான், ஒரு தூதன் ஷைத்தானாக மாறியிருக்கிறான். அப்படியாயின் அல்லாஹ் மனிதனை படைத்த நோக்கம் என்ன? No answer!!!
மேலும் குர்ஆனில் ஷைத்தான் கேட்ட கேள்வி சரியாகவே உள்ளது .ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன் ( குரானின் படி). அல்லாஹ்வை தவிர வேறே யாரையும் வணங்க கூடாது என்று அல்லாஹ்வே சொல்லி இருக்க ஆதாமை வணங்க சொன்னது அல்லாஹ்வுடைய குற்றமேயாகும். ஆகவே ஒரு தூதனை ஷைத்தானாக மாற்றியது அல்லாஹ்வே.
தளத்தின் கட்டமைப்பு தற்போது எளிமையாகவும் அழகாகவும் உள்ளது. காலத்திற்கேற்ற மாற்றம். வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கம்.ஆனால் அவர்கள் இதற்கு உருப்படியான பதில் சொல்லமாட்டார்கள்.அவர்கல் எதையும் குழப்பி உலப்புகிறவர்கள்தான்.தளம் நன்ராக வடிவமைக்க பட்டுல்லது.மிக நன்ரி.