நூல் அறிமுகம் : இஸ்மாவேலருக்கு 300 பதில்கள்

 கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களுக்கு நம்முடைய இணைய தளத்தில் புதிய பகுதியாக  கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக உள்ள புத்தகங்கள் மற்றும் ஒளி,ஓலி தட்டுகள் அறிமுகம் செய்ய விரும்புகிறோம்.நீங்கள் அறிந்த இதுபோன்ற புத்தகங்கள் ,மற்றும் ஒலி ,ஒளி தட்டுகள் ஆகியவற்றை குறித்த தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்

   புத்தகங்களானாலும் ,ஒளி,ஓலி தட்டுகளானாலும் அவற்றில் உள்ள அனைத்து கருத்துக்களும்,நம் கருத்தோடு ஒத்துபோகிறது என்ற காரணத்தில் நாம் இங்கு அறிமுகப்படுத்துவதில்லை.அதில் பெறும்பான்மை நமக்கு நன்மை பயக்கும் என்பதாலேயே அறிமுகப்படுத்துகிறோம்.சில கருத்துக்கள் நமக்கு ஒத்துப்போகவில்லையானாலும் நாம் அதை அறிமுகப்படுத்துகிறோம்.நீங்கள் பயணடையவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக.

முதல் முறையாக இஸ்மாவேலருக்கு 300 பதில்கள் என்ற புத்தகத்தை பற்றி உங்களோடு பகிந்துகொள்ளுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

 

வெளியீடு:ஏலீம் இவாஞ்சல்

முகவரி     :தபால் பெட்டி எண் 4

                          மதுரை 625016 இந்தியா

கிடைக்குமிடம்:அனைத்து முண்ணனி கிறிஸ்தவ புத்தக நிலையங்கள்.

இஸ்லாமியரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று விரும்புகிற அனைத்து கிறிஸ்தவர்களும் முதலில் படிக்கவேண்டிய ஒரு அருமையான புத்தகமாகும்.கிட்டதட்ட 8 பதிப்புகளுக்கு மேல் வெளிவந்த ஒரு புத்தகமாகும்.பல சந்தர்பங்களில் இஸ்லாமியர்களிடமிருந்து கேட்கப்படும் சாதாரணமான கேள்விகளை எப்படி சந்திக்கவேண்டும் என்பதை ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.

வேதவசனங்களை பற்றியும்,தீர்க்கதரிசனங்களை பற்றியும் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் இல்லாமல் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளுக்கும் அழகாக பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.மேலும் இஸ்லாமை குறித்து அடிப்படையான சில விசயங்களை அறிந்துகொள்ள இந்த புத்தகம் உதவுகிறது.

வேதாகமம் திருத்தப்பட்டுவிட்டதா? போன்ற அடிப்படையற்ற கேள்விகளுக்கு லாவகமாகவும்,அறிவுப்பூர்வமாகவும் பதில்களை அளித்துள்ளார் ஆசிரியர்.

இஸ்லாமியர்களின் விதண்டாவாதமான கேள்விகளை எப்படி சந்திக்கவேண்டும் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு  தொடக்கப்புள்ளி என்று சொன்னால் அது மிகையல்ல.

நிச்சயம் வாங்கி வசித்து பயன் பெற வேண்டிய ஒரு அருமையான புத்தகமாகும்.ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மேள் உண்டாவதாக.

10 thoughts on “நூல் அறிமுகம் : இஸ்மாவேலருக்கு 300 பதில்கள்”

  1. சகோ. P.A ஹட்ஸன் டேய்லர் இஸ்லாமிய பின்னணியில் சத்தியத்தை அறிந்து, ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சகோதரன. கிறிஸ்தவர்களை இஸ்லாத்துக்கு அழைக்கும் பணியில் நான் ஈடுபட்டுகொண்டிருந்த சமயத்தில் இவர் எழுதிய “கஃபாவிலிருந்து கல்வாரிக்கு” என்ற புத்தகம் எனது கரத்தில் கிடைத்தது. அதில் சத்தியத்துக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பத்து இஸ்லாமியரின் சாட்சிகள் உள்ளடங்கியிருந்தது.
    அதனை வாசித்து மிகவும் வேதனையடைந்த என்னை அவரின் இரண்டாம் புத்தகமான “இஸ்மவேலர் கேட்கும் 100 கேள்விகளுக்கான பதில்கள்” என்ற புத்தகம் என் மனக்கண்களை திறந்தது. இப்பொழுது அதே புத்தகத்தில் 300 கேள்விகள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. கர்த்தர் அந்த சகோதரனை மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும்!

    Reply
  2. sir i want this book how much of this book cost please tell me
    my address is
    21-i robertson street,
    chinna moperi palayam,
    vagarayam palayam,
    karumatham patty(via)
    coimbatore-641 659
    mobile 9790236885

    Reply
  3. மிக இனிய நண்பர், ஹட்சன் டெய்லர் இஸ்லாமிய பிண்ணனியத்திலிருந்து இயேசுவை ஏற்றுக் கொண்டவர். இஸ்லாமியரின் உள்ளத்தை மிகவும் நன்றாய் பிறப்பால் அறிந்திருக்கும் இவர் எழுதியிருக்கும் இப்புத்தகம் நிச்சயம் பலரின் கண்களை திறக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் பல படைப்புக்களை தர நான் அவரை வாழ்த்துகிறேன்.

    Reply
    • Assalamu alaikkum ….. Sakothare naan oru muslim christvanaka irunthu maarinavan thaan atharkaaka naan enraikume intha unmaiai sonnathu illaiye ippothu koora vendiya nirpanthathil ungalidam koorukirean inia nanpar hutson avarkal islamiaraka irunthu pinpu maari intha putthakathai eludi ulaar enru neengal koorineerkal insha allah ithaium naan santhipoam irukattum thakka ippothaiku kaaranagalai naan vinavukirean hutson avarkal neengal ismavelarukku 300 kealvikal enru koori etho kadamaiku eludukrathai poal eludhi ulleerkal insha allah naan thangalidam inum pala putthakangalai ethir paarkirean en velai sulapamaka mudium engalin nanparkal kulu intha putthakathuku pathil kudukka ullanar esakin arthamatra 300 ularalkal enra thalaipil katturai vadivil 8 paakangalaka thokukka ulloam insha allah ungalin putthakathuku thakka varikuvari pathil kuduthu atharam kuduthu varukiroam quran vasanathai entha pinnanien karuthuminri koori karanamilamal merkoal kaati ulleerkal naan athai patri virivana vilakathodu eluda ulean insha allah hutson avarkale thayaraka irungal naam santhikum neram viraivil varum

      Reply
  4. Dear brother… Praise the Lord….. தங்களது புத்தகத்தை பற்றி கேள்வி பட்டதுமே ஒரு பெரிய பரிசு கிடைப்பது போல தோன்றுகிறது.
    எனக்கு அநேக இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. தங்களது புத்தகம் எனக்கு கிடைத்தால் மிகவும் பயனளிக்கும்.

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.