கிறிஸ்தவர்களுடனான நேரடி விவாதத்தை தவிர்க்கும் Dr. ஜாகிர் நாயக்: Dr. Zakir Naik Evades SAN Debate Invitation
Dr. ஜாகீர் நாயக் SAN ன் விவாத அழைப்பை தவிர்க்கிறார்.
Dr. ஜாகீர் நாயக் கடந்த நாட்களில் பிரபல கிறிஸ்தவ அறிஞர்கள் சகோ. சாம் ஷாமோன், சகோ. ஜேமஸ் வைட் மற்றும் சகோ. டேவிட் வுட் மேலும் இந்துமத ஆரிய சமாஜ்ஜம் மற்றும் நாத்திக அலி சீனா ஆகியேரின் விவாத அழைப்புகளை ஏற்காமல் ஒதுங்கியது போல இப்போது SAN பிரதிநிதிகளையும் விவாதத்தில் சந்திக்க விருப்பமற்றவராக இருக்கிறார். பின்வருபவை IRF க்கும் SAN க்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றங்கள். ஜூலை 22, 2010 வியாழனன்று சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க் Sakshi Apologetics Network (SAN) லிருந்து ஒரு பிரதிநிதிக் குழு மும்பையில் உள்ள IRF அலுவலகத்திற்கு நேரில் சென்று விவாத அழைப்பைக் கொடுத்தது. ஜூலை 26, 2010 திங்களன்று, SAN பிரதிநிதிகளோடு விவாதிக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று IRF தெரியப்படுத்தினது. ஜூலை 27, 2010 செவ்வாயன்று விவாத அழைப்பை வெளிப்படையாக விட்டு IRF ன் தந்திரங்களுக்கு பதில்அளித்தது. கீழே வரும் பத்திகள் மேலே குறிப்பட்ட தகவல் பரிமாற்றங்களாகும். .
1. சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க் SAN மிடமிருந்து IRF க்கு:Copy of the Letter of Debate Invitation from Sakshi Apologetics Network (SAN) to IRF
திரித்துவ தேவனாகிய யொகோவா, தீர்க்கதரிசிகள் அழைத்த உண்மையான ஒரே தேவன்@ இயேசு கிறிஸ்துவாக அவதரித்தவர் எல்லா முழங்காலும் அவருக்கு முன்பாக முடங்கி எல்லா நாவுகளும் அறிக்கை செய்யக் கூடிய அவருடைய நாமம் மகிமைப்படுவதாக.
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பெலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 2 கொரிந்தியர் 10: 4-5
To,
Date: 22 July 2010
Janab Dr. Zakir Naik,
President, IRF,
Mumbai.
Dear Brother Janab Dr. Zakir Naik,
அன்புச் சகோதரர் ஜனாப். Dr. ஜாகீர் நாயக் அவர்களே, சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க் SAN லிருந்து வாழ்த்துக்கள்.
இந்தக் கடிதமானது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதயாத்தின் பொதுவான விருப்பமுள்ள தலைப்புகளின் கீழ் பதிவு செய்யப்படும் ஒரு திறந்த வெளி விவாதத்திற்கு உங்களை அழைப்பதாகும்.
இந்த அழைப்பிதழின் நோக்கமும் பின்னனியமும்:
மதங்களின் ஒப்பாய்வுப் பற்றி குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றிய உங்கள் வாதங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பி நீங்கள் பேசியவற்றையெல்லாம் குறித்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ நணபர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தினார்கள் நாங்களும் தனிப்பட்ட விதத்தில் அவைகளைக் கண்டிருக்கிறோம். மற்ற தாவாக் குழுக்களின் ஏராளமானக் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளித்து பொது ஜனத்தின் சந்தேகங்களை ஆதாரங்களோடு நிவிர்த்தி செய்திருப்பதால் எல்லாருக்கும் நன்மையளிக்கும் தலைப்புகளில் உங்களுடனும் நாங்கள் விவாதிக்க வேண்டும் என்று கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் நண்பர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். அதன் மூலம் சத்தியம் தெளிவாக நிலை நாட்டப்படும். நாங்கள் இந்த விவாதத்தை நடத்த நோக்கமாயிருக்கிறோம் ஏனெனில் மிகத் திரளான பொது மக்கள் இந்த இரண்டு மார்க்கங்களையும் சரியாக ஒப்பிட்டுப் பார்க்கவும் இறைவனுக்கு சித்தமானால் உண்மையான சத்தியத்தைப் பின்பற்றுவதற்கு ஒரு புரிந்து கொண்ட முடிவை எடுப்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பை பெறுவார்கள் என்பதாகும்.
இந்த நோக்கத்தோடு, இணையதளத்தில் உள்ள உங்கள் இமெயில் ” islam@irf.net” மூலம் ஒரு விவாதம் நடத்த உங்களைத் தொடர்பு கொள்ள SAN எத்தனையோ முறை முயற்சித்தது ஆனால் எந்த பதிலையும் திரும்ப பெறவில்லை. நீங்கள் அதைக் கண்டிருக்கவில்லையோ என்று எண்ணி இந்த விவாத அழைப்பை நேரடியாகவே உங்களிடம் கொடுக்கிறோம்.
விவாதத்திற்கென்று தெரிந்துகொள்ளப்படுகிற தலைப்புகள்.
பொது மக்களுக்கு அறிவையூட்டும் எண்ணத்தோடு பின்வரும் தலைப்புகளில் ஏதாகிலும் ஒன்றை (அல்லது முழுவதையும்) தெரிந்தெடுக்க இருக்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அல்லது ஹஸாரத் முகமது : மனித இனத்திற்கான உண்மையான நல்லொழுக்க மாதிரி யார்?
வேதாகம மற்றும் இஸ்லாமிய நம்பிக்கையில் மரண்த்திற்கு பிறகு வாழ்க்கை : எது நிதியானது மற்றும் ஆவிக்குரியது?
கிறிஸ்தவமா இஸ்லாமா: மனித இனத்திற்காக உண்மையான இறுதி தீர்வு எது?
வேதத்தின் யெகோவா தேவன் அல்லது குரானின் அல்லா : யார் உலக்தின் ஒரே உண்மையான இறைவன்?
தீர்மானிக்கப்படும் தேதிகள்:
இந்த விவாதம் இருதரப்பிற்கும் வசதியான தேதி மற்றும் இடத்தில் ஏற்படுத்தப்படும். இருப்பினும் சற்று துரிதமாக முடிவெடுப்பதற்காக இரு தரப்பிற்கும் வசதியான ஏதாவது சனிக்கிழமைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் (ரமலான் மாதத்திற்கு பின் மற்றும் கிறிஸ்மஸ் நாட்களுக்கு முன்னதாக) அல்லது 2011 ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலான ஏதாவது வசதியான சனிக்கிழமைகளைத் தெரிந்து கொள்ள கேட்கிறோம். உங்கள் தரப்பிலிருந்த ஏதாவது மூன்று விருப்பங்களை தயவாக தெரிந்து கொள்ளுங்கள்.
SAN சார்பாக விவாத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள்:
எங்கள் விவாத பிரதிநிதி சகோ.ஜெரி தாமஸ். சகோ. ஜெரி தாமஸ் SAN உடைய தொடக்க உறுப்பினர் மற்றும் அதன் தலைமை ஆலோசகராவார். இந்தியாவின் ஏழு மாநிலங்களில் அதன் பணிகள் நடைபெறுகிறது. மேலும் அவர் ஒரு Board Member of a trans-denominational theological college மற்றும் ஒரு பிரபல கிறிஸ்தவ பப்ளிக்கேஷனுடைய சங்க நிர்வாகியாவார். பிரபல தாவா பிரச்சாரர்களான சகோ. ஆசிஃபுதின் முகமது (President of IACR, Hyderabad) மற்றும் இம்ரான் (President of IREF, Hyderabad). ஆகியோருடனான இவரது விவாதம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. சகோ. ஜெரியின் நிகழ்ச்சிகள் இந்தியாவில் ஒரு பெரியக் கிறிஸ்தவச் சேனலான ரக்ஸனா (RakshanaTV) தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. மற்றொரு தாவா பிரச்சாரகர் ஜனாப் எம்எம். அக்பருக்கு(Director of Niche of Truth), இவர் வெளிப்படையாக மறுப்பு கொடுத்துப் பேசியது கேரளாவில் இருக்கும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியிலே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் இவர் டாவின்சிக் கோடு க்கு மறுப்பு, ஓரினத் திருமணத்திற்கு மறுப்பு போன்ற கிறிஸ்தவ மார்க்க தலைப்புகளில் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். அதைப் போல நீதிபதி சோம்சேகர் கமிஷனுக்கு முன்பு இந்துக்களால் எழுப்பப்பட்ட ஏராளமான இறையியல் கேள்விகளுக்கு பதிலளித்தார். தன்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு உணர்வுப்பூர்வ பாதுகாவலராக சகோ. ஜெரி, சுவாமி தயானந்த சரஸ்வதியால் (Arya Samaj) அவருடய உண்மையான ஒளி (Satyarth Prakash) என்ற புஸ்தகத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷம் வரை எழுப்பட்டிருந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கொடுத்திருக்கிறார். அந்த புஸ்தகம் புராண இந்துமதம் மற்றும் இஸ்லாம், கிறிஸ்தவத்தைப் பற்றி விமர்சனங்களைக் கொண்டது. இதற்கு அப்பாற்பட்டு உலக பத்திரிக்ககை, அமரிக்காவின் ஐந்தாவது பெரிய வார நாளிதழ் போன்றவற்றில் பேட்டிகளும் கல்வி சார்ந்த அமைப்பில் ஏராளமான நிறுவனங்களி நேரடி கலந்துரையாடல்களும் அளித்துள்ளார்.
தீர்மானிக்கப்படும் ஒப்பந்தம் :Proposed Modalities/Agreement
நாம் கலந்தாலோசித்து நடத்தை விதிகளையும் மற்ற உடண்பாடுகளையும் குறித்து முடிவு செய்யலாம். இருப்பினும் விவாதம் பற்றிய சற்று துரிதமான முடிவுக்காக சில உத்தேசிக்கப்படும் உடண்பாடுகளை இதோடு பிற்சேர்க்கையாக இணைத்திருக்கிறோம்.
தீர்மானிக்கப்படும் இடம்
பின்வரும் இடங்களில்; ஒன்றை அதன் வசதிக்கேற்ப அல்லது இருதரப்பிற்கு இணக்கமான வேறொரு இடத்தையோ தெரிந்து கொள்வதையும் அதன் செலவீனங்களையும் பொறுப்பேற்கவும் அளிக்கிறோம்.
அ) கொச்சின் (கேரளா) – ஏதாவது ஒரு திறந்த அரங்கம் அல்லது மைதானம். ஆ) பெரிய ஹைதராபாத் (ஆந்திரபிரதேஷ்) – ஏதாவது ஒரு பொது அரங்கம் அல்லது மைதானம். பின்வரும் முகவரியில் தயவாக ஜூலை 30, 2010 அல்லது அதற்கு முன்னதாக பதில் தெரிவிக்கவும். ஜீலை 30, 2010 வரையிலும் உங்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லையென்றால், இந்த விவாதத்திற்கு உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் விருப்பமற்றவர்களாயிருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் முகவரிக்கு நீங்கள் மின் அஞ்சல் அதை பெரிதும் வரவேற்போம்.
மேலும் உங்களுக்கு ஏதாவது தகவல் தேவைப்படுமானாலும் தெரியப்படுத்தவும்.
Our Contact Details:
Address Bro. George John, Administrator, Sakshi Apologetics Network,IPC Bethel Prayer Center, Vaikom, P.O,Kottayam, Kerala- 686141
Website: www.sakshitimes.org
Email: sakshi.apologeticsnetwork@gmail.com
Mobile: 09539797833
Thanking you,
Your brother in humanity,
For Sakshi Apologetics Network George Antony Paul
சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க் மற்றும் ஐஆர்எப் – ன் பொது விவாதத்திற்கான ஒப்பந்தம்
சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க் (SAN) மற்றும் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் இடையே ஏற்பட்ட பரஸ்பர தகவல் பரிமாற்றத்தின் படி இரு சாராரும் ஒரு பொதுவான அறிவுச்சார்ந்த விவாத்தை கேரளாவின் கொச்சின் ஆந்திரப்பிரதேஷின் பெரிய ஹைதராபாத்தில் நடத்துவதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றனர். நேரடி கலந்தாலோசித்தல் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் போது SAN மற்றும் IRF தங்களின் இந்த பொது விவாதத்திற்கு முக்கிய நோக்கமாக தெரியப்படுத்தியிருப்பது என்னவென்றால், இந்திய சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமையின் படி ஜனங்களை அமைதியாக ஒன்று கூட்டி அவர்களுக்கு கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்பற்றி கல்வியை வழங்கி, பேச்சாளர்கள் தங்கள் மார்க்கத்தை எடுத்துக் கூறும் போது மார்க்க சத்தியங்களுக்கு மக்களை மாற்றுவதாகும். இந்த நிகழ்வை அறிவுப்பூர்வமாகவும், அமைதியாகவும் நடத்த, விவாதத்திற்கு முன்னும், விவாதத்தின் போதும், விவாதம் முடியும் வரையும் மேலும் முடிந்து பிறகும் கைப்பற்ற வேண்டிய நடத்தை விதிகளாக பின்வரும் குறிப்புகளை SAN மற்றும் IRF முறையாக ஒப்புக்கொண்டுள்ளனர். பின்வரும் குறிப்புகள்:
1. SAN மற்றும் IRF, அறிவிக்கப்படும் விவாத தலைப்பின் கீழ் கிறிஸ்தவத்தின் சார்பாக சகோ. ஜெரி தாமஸ் (SAN பேச்சாளர்) மற்றும் அதே நிகழ்ச்சிக்கு இஸ்லாம் சார்பாக ஜனாப். Dr.ஜாகீர் நாயக் ஆகியோருக்கு இடையில் கல்வி மற்றும் அறிவுச்சார்ந்த ஒரு திறந்த வெளி பொது விவாதத்தை நடத்த ஒப்புக் கொண்டிருக்கின்றன.
2. பொது விவாத நாள் : A.D. XXX the Saturday (TBD).
3. SAN மற்றும் IRF ன் விவாத நடுவர் மேடை ஏறும் போது விவாதம் தொடங்கும். முக்கிய நடுவர் IRF நடுவருடன் இணைந்து செயலாற்றும் SAN நடுவராக இருப்பார். SAN நடுவர் பேச்சாளர்களையும் மற்று பிரதிநிதிகளையும் மேடைக்கு வரவழைப்பார். இருதரப்பிலிருந்தும் பிரதிநிதிகளும் முறையே தங்களுடைய பேச்சாளர்களுக்கு வசனங்களை பொதுஜனத்திற்கு படிப்பதற்கும், சுட்டு குறிப்புகளை பரிசோதிக்கவும், குறிப்புகளில் உதவி செய்யவும் இருப்பார்கள்.
4. அதன் பிறகு 10 நிமிடங்களுக்கு பரிசுத்த வேதாகத்தை வாசிக்கும் நேரமும் அதைத் தொடாந்து அதே கால அளவில் குரானை வாசிக்கும் நேரமும் இருக்கும்
5. SAN நடுவர் விவாதத்தின் தலைப்பு, விவாத அமைப்பு மற்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டபடி விவதாதத்தை அமைதிப் பூர்வமாக நடத்துவதற்கு பார்வையாளர்களால் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகளையும் அறிவிப்பார்.
6. SAN நடுவர் SAN பேச்சாளரை அறிமுகம் (அல்லது அறிமுகம் செய்ய யாரையாவத அழைப்பார்) செய்வார் அதைத் தொடர்ந்து IRF நடுவர் IRF பேச்சாளரை அறிமுகம் (அல்லது அறிமுகம் செய்ய யாரையாவத அழைப்பார்) செய்வார்.
7. விவாத அமைப்பின் விதமானது:
விவாதத்திற்கு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் வரிசையானது: கிறிஸ்தவ பேச்சாளர் (அல்லது முஸ்லீம பேச்சாளர்- TBD) தங்கள் கருத்தை பதிவுசெய்வார்கள் அதைத் தொடர்ந்து முஸ்லீம் பேச்சாளர் (அல்லது கிறிஸ்தவ பேச்சாளர் – TBD) தங்களுடைய கருத்தை பதிவு செய்வார். அதைத் தொடர்ந்து இந்த வரிசையில் மறுப்புக் கொடுப்பது தொடரும்.
அ) ஒவ்வொரு தலைப்பும் முறையே இருதரப்பு பேச்சாளர்களால் 60 நிமிடங்களுக்கு பேசப்படும். (pl. note clause 9)
ஆ) இதைத் தொடர்ந்து இருதரப்பிலிருந்தும் முறையே 20 நிமிடங்கள் மறுப்புக் கொடுப்பதும் நடைபெறும். (pl. note clause 8)
இ) கருத்து பதிவு செய்வது மற்றும் மறுப்புக் கொடுப்பதைத் தொடர்ந்து வந்திருக்கும பொதுஜனங்கள் கேள்வி கேட்க 45 நிமிட கேள்வி பதில் நேரம் பொதுவானதாக இருக்கும்.
ஈ) பார்வையாளர்கள் கேள்வி கேட்க அதிகபட்சமாக 2 நிமிடமும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் கொடுக்க பேச்சாளர்களக்கு 5 நிமிடமும் அதிகபட்சமாக அளிக்கப்படும். (pl. note clause 8)
உ) முதல் கேள்விக்கு பதில் அளிக்க நடுவர் இரண்டாவது பேச்சாளருக்கு 5 நிமிடம் கொடுப்பார் அதைத் தொடர்ந்து இரண்டாவது கேள்விக்கு பதில் அளிக்க நடுவர் முதல் பேச்சாளருக்கு 5 நிமிடமும் அளிப்பார். இவ்விதமாக கருத்து பதிவு, மறுப்புக் கொடுப்பது மற்றும் கேள்விக்கு பதில் அளிப்பது முழுப்பகுதி வரை தொடரும்.
8) யாரவது அதிகம் நேரம் எடுத்துவிட்டால், அதே அளவுக்கான நேரம் மற்ற தரப்பில் உள்ளவருக்கம் கொடுக்கப்படும். இருப்பினும் பேச்சாளர்களுக்கும் அவர்களது நேரத்தை நினைவுப்படுத்துவதும் நேரம் அதிகமாக எடுக்கப்படும் போது எச்சரிப்பதம் 5 நிமிடத்தை தாண்டும் போது விரும்பினால் மைக்ரோபோனை நிறுத்துவதும் இருதரப்பு நடுவர்களுடைய கடமையாகும்.
9) முடிவுரைக்குப் பிறகு சரியான கால அளவிற்கு SAN நடுவர் மற்றும் IRF நடுவர் ஏதாவது முக்கிய அறிவிப்புகள் வாசிக்க வேண்டுமென்றால் வாசிக்கலாம்.
10) விவாதத்திற்கான பொருளாதாராம் மற்றும் ஏற்பாடுகள், விளம்பரம் மற்றும் ஒளிப் பதிவு செய்வதைத் தவிர மற்றவைகளை SAN பொறுப்பெடுத்துக் கொள்ளும்.
11) SAN மற்றும் IRF எல்லா நியாயமாhன தொடர்பு முறைகளில் நிகழ்வுகளை விளம்ரபம் செய்ய முழு அதிகாரம் பெற்றிருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக (ஏதாவது) புகைப்படம் SAN மற்றும் IRF மூலம் கொடுக்கப்பட்டிருப்பின் இரு தரப்பிலும் உபயோகப்படுத்தப்படலாம்.
12) SAN ம் IRF ம் தங்கள் சொந்த பெயரில் விளம்பரம் செய்யலாம்.
13) ஒருவேளை IRF தொடர்பாக SAN செய்யும் விளம்பரத்தில் அல்லது SAN தொடர்பாக IRF ன் விளம்பரத்தில் ஏதாவது எழுத்துப் பிழையோ தவறோ இருந்தால் அந்த விளம்பர சாதனம் அல்லது விளம்பரம் உடனடியாக திரும்ப பெறப்பட்டு திருத்தம் செய்யப்பட வேண்டும். பிறகு வெளியிடப்பட வேண்டும்.
14) திறந்த வெளி பொது விவாதத்திற்கான தலைப்பு:
15) (TBD) விவாத மொழி ஆங்கிலம்.
16) பொது விவாதத்திற்கான இடம் : (TBD ) (கொச்சின்,கேரளா ,பெரிய ஹைதரபாத், ஆந்திரப்பிரதேஷ்)
17) SAN மற்றும் IRF தங்களுக்கு ஏற்ற விதத்தில் தங்கள் ஒலி ஃ ஒளிப் பதிவு செய்வதை தேவையான இடைவெளிகளோடு பார்வையாளர்களையோ அல்லது மறுபிரிவினரையோ மறிக்காமல் அமைத்துக் கொள்ளலாம்.
18) ஒளிப்பதிவு எடிட் செய்யப்படும் போது அதில் உள்ள எந்த தகவலும் மாற்றப்படாமல் இரு பேச்சாளர்களுடைய முழுமையான கருத்துப் பதிவு, மறுப்புக் கொடுத்தல், கேள்வி பதில் ஆகியவற்றோடு வெளியிடப்படவேண்டும். பிரதி (வெளீயீடு) எந்த அமைப்பிலும் ஆனால் மேற்கூறப்பட்ட நிபந்தனைகளோடு இருக்கவேண்டும்.
19) SAN மற்றும் IRF சம அளவில் தன்னார்வலர்களை வைத்துக் கொள்ள வேண்டும். IRF தங்கள் முழுதிறைமையின் படி இஸ்லாமிய பார்வையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் அதைப் போல் SAN தங்கள் முழுத்திறமையின் படி கிறிஸ்தவ பார்வையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும். தன்னார்வலர்கள் தங்களுக்குரிய பிரிவின் பெயர் பொறித்த பேட்ஜை அணிந்திருக்க வேண்டும்.
20) விவாதத்தின் முழுப்பகுதியும் விவாத தலைப்பின் அடிப்படையில் கிறிஸ்தவ முஸ்லீம் கருத்துக்களை கற்றுக்கொடுப்பதற்காகவே இருக்கிறது என்பதில் SAN ம் IRFம் தெளிவாக இருக்க வேண்டும். சமயங்களை ஒப்பாய்வு செய்யும் இரு தரப்பு பேச்சாளர்களாலும் கருத்துப் பதிவு, மறுப்பு கொடுத்தல் கேள்வி பதில் பகுதிகளில் வைக்கப்படும் விவாதமானது தெய்வதூஷணமாகவோ பொது நிந்தனையாகவோ கருதப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியான கேஸ் போடுவது என்பது ஒவ்வாததாகும்.
21) இருதரப்பினருடைய சம்மதத்தோடு வேறு ஏதாவது முக்கியமான குறிப்புகள் சேர்க்கப்படவோ, திருத்தப்படவோ அல்லது நீக்கப்படவோ செய்யலாம். அப்படிப்பட்ட மாற்றங்களின் மூலம் இருதரப்பிற்கும் உரிய நேர்மை, நீதி மற்றும் சமஉரிமைகள் மாற்றியமைக்கப்படாது.
2. Copy of the Reply from IRF to Sakshi Apologetics Network
On Mon, Jul 26, 2010 at 8:47 PM, < maqbool@irf.net> wrote:
25th July 2010
Dear Brother George John,
Greetings of Peace (Salaam) on you.
உங்களுக்கு சமாதானத்தின் (சலாம்) வாழ்த்துகள்.
22 ஜூலை 2010 தேதியன்று கொடுக்கப்பட்ட உங்கள் கடிதத்தைப் பெற்றோம்.
நூற்றுக்கணக்கான மக்கள் Dr. ஜாகீர் நாயக்கிடம் விவாதத்திற்கு கேட்டுக் கொண்டிருப்பதால் அவருக்கோ அல்லது அவருடைய மாணாக்கருக்கோ விவதங்களுக்கு நேரமில்லை.
Dr. ஜாகீர் நாயக் வேறு சில முக்கியமான காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றார்.
ஒருவேளை நேரம் இருப்பினும் அவர் அதிக பிரசத்தி பெற்ற மற்றும் பெரிய பின்னடியார்கள் கூட்டம் கொண்ட ஒருவரோடு விவாதிப்பார். இருப்பினும் அவருடைய மாணாக்கருடன் விவாதத்தை ஒழுங்கப்படுத்த முயற்சி செய்தேன், ஆனால் திரு. ஜெரி தாமஸ் பெயரைக் கேட்டவுடனே, அவருடைய செயல்திறன் மிகவும் மோசமாக இருப்பதாக கண்டபடியால் அவரோடு விவாதித்து நேரத்தை செலவழிப்பது உகந்ததாயிருக்காது என்று சொல்லிவிட்டார்கள்.
அவர்களுக்கு நேரமிருந்தாலும் திரு. ஜெரி தாமஸை விட உயர் திறன் உள்ளவர்களிடத்தில் தான் விவாதிப்பர்கள்.
உங்களுடைய கடிதத்திலிருந்து ஏற்கனவே திரு. ஜெரி தாமஸ் சில முஸ்லீம்களோடு நடத்தியிப்பதை அறிந்து கொண்டோம். அவர்கள் Dr. ஜாகீர் நாயக்கின் மாணவர்களாக இருந்தவர்கள்.
மேலும நாங்கள் விசாரித்ததில் திரு. ஜெரி தாமஸ் Dr. ஜாகீர் நாயக்கின் மாணவர்களோடு கூட விவாதம் செய்யும் உயரிய தகுதி உள்ளவர் அல்ல என்ற தகவலை அறிந்து கொண்டோம்.
இது ஒரு விளம்பரம் படுத்தும் முயற்சியே என்று இந்த அழைப்புக் கடிதமே காட்டுகிறது. திரு. ஜெரி தாமஸ் போன்று அநேகர் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவதற்கென்றே தாங்கள் Dr. ஜாகீர் நாயக்கை விவாதத்திற்கு சவால் விட்டோம் என்ற கடிதத்தை காட்டும் எண்ணமுடையவர்களாயிருக்கின்றனர்.
எல்லாம் வல்ல இறைவனே நம்மை சத்தியத்திற்கும், சமாதானத்திற்கும் மற்றும் இரட்சிப்பிறகும் உரிய வழியிலே நடத்துவானாக. ஆமீன்.
Yours sincerely,
MAQBOOL BARWELKAR
Public Relation Manager
3 Copy of the Response of SAN to IRF
On Tue, Jul 27, 2010 at 2:26 PM, SAN (INDIA) < sakshi.apologeticsnetwork@gmail.com> wrote:
In the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in incarnation is known as Jesus Christ, in whose name every knee shall bow and every tongue shall confess be glorified for ever and ever.
To,
Maqbool Barwelkar
Public Relation Manager,
IRF, Mumbai
Dear Brother Maqbool Barwelkar,
Dr. ஜாகீர் நாயக்குடன் எங்கள் விவாதம் பற்றி கடிதத்திற்கு இமெயில் பதில் கொடுத்ததற்கு நன்றி .
அநேக இடங்களில் தடை செய்யப்பட்டு, மற்ற முஸ்லீம்களால் 20 க்கும் அதிகமான பத்துவா பெற்றுள்ள Dr. ஜாகீர் நாயக் குறிப்பாக நாங்கள் அடுத்த வருடம் 2011 வரை விவாதத்திற்கு தேதி கொடுத்து இருக்கும் போதும் நேரமில்லாத அளவுக்கு ‘மற்ற முக்கியமான காரியங்களில் ஈடுப்பட்டிருக்கின்றார்” என்று கேட்கும் போது விநோதமாயிருக்கிறது. மார்க்கத்தை பிரசங்கிப்பதன் empireமூலம் ஒரு இராஜ்ஜியத்தை (Source: The Tehelka, July 10, 2010 “a research foundation that provides fodder for all these”). (e.g. international school) கட்டியிருக்கும் ஒரு மனிதனுடைய வேலைப் பழுவை நாங்கள் புரிந்து கொள்கிறோம். மற்ற தாவா பிரச்சாரர்களோடு வெற்றிகரமாக விவாதம் நடத்தியிருக்கும் கிறிஸ்தவர்களோடு விவாதம் செய்வதற்கு விருப்பமில்லையென்று தெரிவிக்கும் அவர் இனி மார்க்க ஒப்பாய்வுப் பாடங்களைப் பற்றி குறிப்பாக கிறிஸதவத்தைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டு தன்னுடைய நிர்வாக பொறுப்புகளை கவனிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
விவாத அழைப்பை தவிர்ப்பதற்கான உங்களுடைய காரணங்கள் எங்களை சிரிக்க வைக்கிறது. முன்பின் விவாதமே செய்யாத ஒருவருடன் விவாதிக்க வரும் படி உங்களிடத்தில் அழைப்பு கொடுக்கவில்லை மாறாக மற்றா தாவா பிரச்சாரர்களிடத்தில் வெற்றிகரமாக விவாதம் செய்து வெளிப்படையாக அவர்களுக்கு சரியான மறுப்புக் கொடுத்திருக்கும் ஒருவரைத் தான் முன்நிறுத்தியிருக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் கடந்த நாட்களில் நடந்தவைகளையும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும் உலகப் பிரசித்திப் பெற்ற கிறிஸ்தவ மார்க்க அறிஞர்கள் ஆன்சரிங் இஸ்லாமின் சகோ. சாம் சாமோன் (Sam Shamoun) போன்றவர்களுடன் Dr.ஜாகீர் நாயக் அமெரிக்காவில் விவாதம் செய்ய எல்லாம் ஏதுவாயிருந்த போதும் உங்கள் அமைப்பு அந்த விவாதங்களை இதே போல் தவிர்த்து இருக்கிறது. ஆனால் அதன்பிறகு விவாதம் செய்யாத நூலாசிரியர்கள் மற்றும் பிரசங்கிமார்கள் போன்ற கிறிஸ்தவர்களோடு விவாதம் நடத்தியிருக்கிறீர்கள். எனவே விவாதம் செய்வதற்கு விருப்பமில்லாத உங்களிடமிருந்து ஒரு அறிவான தந்திரமான மனப்பாங்கு எழும்பியிருப்தை நாங்கள் காண்கிறோம், அது என்னவென்றால் நீங்கள் யாரென்று வெளியாகி உங்கள் மதிப்பை இழந்து போகாத வண்ணம் ஒருபோதும் திறமையுள்ள கிறிஸ்தவ விவாதம் செய்பவரோடு விவாதம் செய்யக் கூடாது மாறாக விவாதத்தில் அனுபவம் இல்லாதவர்களையே எப்போதும் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமானால், இது ஜாகீர் நாயக் சச்சின் தெண்டுல்கரோடு செஸ் விளையாடிவிட்டு, ஜாகீர் நாயக் திரளான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிகச் சிறந்த ஒரு வீரரோடு சதுரங்கம் விளையாடிவிட்டார் என்று தம்பட்டம் அடித்துவிட்டு விஸ்வநாத் ஆனந்திடமிருந்து வரும் அழைப்பை Dr. ஜாகீர் நாயக் ‘திரளான ரசிகர் பட்டாளம் உள்ளவர்களோடு” மட்டும் தான் விளையாடுவார் என்று தவிர்ப்பதைப் போல் இருக்கிறது.
‘இருப்பினும் அவருடைய மாணாக்கருடன் விவாதத்தை ஒழுங்கப்படுத்த முயற்சி செய்தேன், ஆனால் திரு. ஜெரி தாமஸ் பெயரைக் கேட்டவுடனே, அவருடைய செயல்திறன் மிகவும் மோசமாக இருப்பதாக கண்டபடியால் அவரோடு விவாதித்து நேரத்தை செலவழிப்பது உகந்ததாயிருக்காது என்று சொல்லிவிட்டார்கள்” என்ற உங்களுடைய கூற்று உண்மையில் எங்களுடைய சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க்கின் பிரதிநிதிகளோடு எந்த ஒரு IRF பேச்சாளர்களும் விவாதிக்கப் பயப்படுவதைக் காட்டுகிறது. IRF மாணவர்களுக்குள்ளும் ; அவர்களுடைய விவாத தன்னம்பிக்கையை அழிக்கப் போதுமானவர் என்று நன்றாக அறியப்பட்ட சகோ. ஜெரி தாமஸ் உங்களுக்கு பிரபலமானவராக இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது !!!.
மேலும் ‘ இது ஒரு விளம்பரம் படுத்தும் முயற்சியே என்று இந்த அழைப்புக் கடிதமே காட்டுகிறது” என்ற உங்கள் கருத்துக்கு. திரு. ஜெரி தாமஸ் போன்று அநேகர் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவதற்கென்றே தாங்கள் Dr. ஜாகீர் நாயக்கை விவாதத்திற்கு சவால் விட்டோம் என்ற கடிதத்தை காட்டும் எண்ணமுடையவர்களாயிருக்கின்றனர்” என்பது – போப் பெனடிக்டை விவாதம் செய்ய அழைத்தது போல விளம்பரமாவதற்கு உங்களுடைய தனிப்பட்ட முறையாக இருக்க வேண்டும் எங்களுடையதல்ல. எந்தக் கேள்விக்கும் இடமில்லாத வகையில் ஒரு பெரிய கிறிஸ்தவ சமுதாயத்திற்கே தலைவராயிருக்கும் போப் பெனடிக்ட்டோடு ஒப்பிடுவதற்கு பெட்ரோ- டாலர்களால் உற்சாகப்படுத்தப்பட்டு உருவாக்கபட்ட ஒரு குழுவிற்கு தலைவராக இருக்கும் ஜாகீர் நாயக் யார்? நிச்சயமாக இதைத் தான் விளம்பரம் தேடும் ஒரு முயற்சி என்று கூறவேண்டும். ஆனால் சகோ. ஜெரி தாமஸ் னுச. ஜாகீர் நாயக்கை விவாதத்திற்கு அழைப்பது விளம்பரம் தேடும் ஒரு முயற்சியாகாது. சகோ. ஜெரி தாமஸ் பெட்ரோ – டாலர் மற்றும் அதின் மூலம எரியூட்டப்படும் பின்னடியார்கள் விஷயத்தை தவிர மற்றெல்லாம் காரியத்திலும் னுச. ஜாகீர் நாயக்கை காட்டிலும் சிறப்பானவரே. உதாரணமாக, உலக பத்திரிக்கை, அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய வார இதழ் அநேக சமகாலத்து காரியங்களைப் பற்றி சகோ. ஜெரி தாமஸின் சீரிய சிந்தனைகளை சேகரிப்பதற்காக அவரிடம் தொடர்ச்சியாக பேட்டி கண்டிருக்கிறது. அதே சமயம் இந்தியாவின் அரசியல் வார இதழ்களில் ஒன்றான தெகல்கா (Tehelka) பத்திரிக்கையானது ஜாகீர் நாயக்கை ஒரு ~கெட்டப் பிரசங்கியார்| (notorious preacher) என்று அழைக்கிறது. கிறிஸ்தவ விசுவாசத்தில் இருக்கும் அநேகப் பிரிவுகளில் சகோ. ஜெரி தாமஸ் பேசியிருக்கிறார் ஆனால் தன் சொந்த இனத்திற்குள்ளேயே ஜாகீர் நாயக்கிற்கு 20 க்கும் அதிகமான பத்வா கொடுக்கப்பட்டிருக்கிறது. சகோ. ஜெரி தாமஸ் தன்னுடைய பொது வகுப்புகளுக்கு அப்பாற் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட ஏராளமான கட்டுரைகளையும் பதிலையும் எழுதியிருக்கிறார் அவை அநேக பத்திரிகைகளில் வெளியாயிருக்கிறது. ஆனால் னுச. ஜாகீர்; நாயக் தன்னுடைய நிரூபிக்கப் படாத பேச்சுக்களையே பேப்பர் வடிவத்தில் திரும்ப எழுதியிருக்கிறார். மேலும், சகோ. ஜெரி தாமஸின் முந்தைய விவாதங்கள் ஏற்கனவே விவாதம் செய்து வந்த தாவா பிரச்சாரர்களுடன் நடந்தது ஆனால் னுச. ஜாகீர் நாயக்கோ ஒருபோதும் விவாதமே செய்திராத அல்லது திறம்பட விவாத்திராத கிறிஸ்தவர்களுடன் விவாதம் நடத்தினார். இன்னொரு வார்த்தையில் – ஒரு அறிவுப்பூர்வமான விவாதத்திற்கு எது தேவை – ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகள், ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு தகுதி, சொந்த சமூகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பது, முன்னர் திறம்பட விவாதம் செய்திருப்பது. சகோ. ஜெரி தாமஸ் னுச. ஜாகீர் நாயக்கை காட்டிலும் மேம்பட்டவராகவே இருக்கிறார். ஆனால் அவர் ஒரு காரியத்தில் உண்மையாக ஜாகீர்; நாயக்கை விட ஒப்பிடமுடியாத அளவுக்கு பின்தங்கியிருக்கிறார் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம், பெட்ரோ – டாலர் விஷயத்தில்.
விவாதிக்க விருப்பமிண்மைக்கான சரியான காரணங்களை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் போது, நாங்கள் கிறிஸ்தவ சமூகத்திற்கும் பெரும் எண்ணிக்கையிலான பொது ஜனங்களுக்கும் விவாதத்திற்கு உங்களுடைய தயக்கம் மற்றும் அனைத்து எதிரிடையான வாதங்களும் வெறுமையும் நேர்மையற்றதுமாயிருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.
கிறிஸ்தவர்கள் னுச. ஜாகீர் நாயக் மற்றும் IRF உடன் விவாதிக்க தயாராக இல்லை என்ற உங்களுயை வீண் பேச்சுக்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக இப்போதும் எதிர்காலத்திலும் இந்த விவாத அழைப்பை உங்களுக்கு திறந்தே வைக்கிறோம். மீண்டும், இரண்டு பிரிவுகளையும் சரியாக பரிசோதிக்கும் தலைப்பின் கீழ் நியாயமான மற்றும் நேர்முறையான முறையில் IRF பிரதிநிதிகளோடு விவாதிக்க SAN பிரதிநிதிகளும் Dr. ஜாகீர் நாயக்கோடு விவாதிக்க சகோ.ஜெரி தாமஸ_ம் தயாராக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளவும்.
IRF ல் உள்ள எல்லா சகோதரர்களும் சத்தியத்தை அறிந்து கொண்டு எங்களுடைய ஆவிக்குரிய சகோதரர்களாகும் படி நாங்கள் உண்மையாக ஜெபிக்கிறோம்.
SAN குறிப்பு: இந்த தகவல்களை தயவு செய்து ஜாகீர் நாயக்கோடும் அவருடை குழுவோடும் ஈடுபடும் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் அனுப்பவும் அதன் பிறகு IRF அலுவலர்கள் கிறிஸ்தவர்களை ஏதாவது சவாலோடு நெருங்கினால், அவர்களைக் கிறிஸ்தவர்கள் SAN க்கு நேராக திருப்பி SAN உடன் விவாதிக்கும் படி சொல்லட்டும்.
ஆங்கிலத்தில் அறிந்துகொள்ள:http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=537&Itemid=42
suresh says
Dear Brothers,
Thanks for God using in mighty way to response some blinded muslims.But onethiing
you should remember that at anycost we are try to show th image of His son Christ..By words especially [.Not like third class muslim leaders.],Anyhow satan try to tempt us to speak as they speak ,dont decieved.
irfan says
Most of the symbols for kiamath happened according to quran and nabi(sal) hadish.only the biggest symbols are waiting to come out.and also quran challenging to you to bring forward any one single sentence like that.why cant u done this challenge .because it comes from ALLAH.so u cant done forever.ALLAH GREAT.