IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமலான் நோன்பு நாள் -28 ஜெபக்குறிப்புகள்

August 17, 2012

கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

நோன்பு நாள்-28  இஸ்ஸாருல் ஹக் வேதாகமத்தைக் குறித்த முஸ்லீம்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில்.

 

izhar_ul_haqq_book_p38-30-days-net

இஸ்ஸாருல் ஹக் என்பது ஒரு முஸ்லீம் புத்தகம்.இது இஸ்லாமிய நாடுகளில் வாழும் பல கிறிஸ்தவர்களின்,குறிப்பாக முஸ்லீம் பின்னணியிலிருந்து வந்தவர்களின் விசுவாசத்தை பெலவீனப்படுத்துகிற,உற்சாகமிழக்கச் செய்கிற புத்தகமாகும்.இது கிறிஸ்தவர்கள் வேதாகமத்தின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை கேலி செய்வதாகவும்,வேதாகமம் முழுவதுமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி முஸ்லீம்கள் அதை விட்டு விலகச் செய்வதாகவும் இருக்கிறது. அதே வேளையில் குரான் எவ்வித குறைபாடும் இல்லாத புத்தகம் என்று இப்புத்தகம் சொல்லுகிறது.

இப்புத்தகத்தில் அடங்கியுள்ளவைகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மானிய மிஷினரியோடு நடந்த விவாதத்திலிருந்து வெளி வந்தவைகளே.விவாதம் செய்யும் முஸ்லீம்களும், ஆசிரியர்களும், பாரம்பரியமாக முஸ்லீம்களின் குற்றச்சாட்டுகளான வேதாகமம் கெடுக்கப்பட்டது.பொய்யானது போன்றவைகளுக்கு ஆதாரமாக,19வது நூற்றாண்டில் ஐரோப்பாவில் வேதாகமத்தின் குணங்களையும்,குறைகளையும் விமர்சித்து எழுதப்பட்டவைகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.இஸ்ஸாருல் ஹக் இன்றைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பல முஸ்லீம்கள் கருதுகின்றனர்.எனவே அதிலுள்ளதை அப்படியே அச்சிட்டு அதனை அடிப்படைவாத முஸ்லீம் தலைவர்கள் பரவலாக இருக்கும் இணைப்புகள் மூலமாக விநியோகம் செய்து வருகின்றனர். மேலும் இந்தப் புத்தகத்தில் உள்ள விவாதங்களை ஷபிர் அலி,ஜமால் படாவி மற்றும் ஜாகிர் நாயக் உட்பட உலகிலுள்ள கிட்டத்தட்ட எல்லா விவாதம் செய்யும் முஸ்லீம்களும்,ஆசிரியர்களும் பயன்படுத்துகின்றனர். இவைகள் 24 மணி நேர செயற்கைக்கோள் தொலைக்காட்சி சானல்கள் மூலமாக ஆசியாவில் உள்ள பார்வையாளர்களுக்கு ஒளிபரப்படுகின்றன. இருப்பினும் ஆச்சரியப்படத்தக்க விதமாக இதுவரையில் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தவும்,முஸ்லீம்களுக்கு சவால் விடவும் இஸ்ஸாரும் ஹக் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற குற்றச்சாட்டுகள் எல்லாவற்றிற்கும் விளக்கமான நூல் வெளியிடப்படவில்லை.

முஸ்லீம்களிடத்தில் மரியாதையுடனான.வேதாகமத்தைக் குறித்து முஸ்லீம்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும்படியான,குரானைக் குறித்த நவீன அறிவுபூர்வ ஆராய்ச்சியைக் கொண்டு வருகிறதுமான ஒரு பதில் மிகப் பெரிய தேவையாயிருக்கிறது.உதாரணமாக புதிய ஏற்பாட்டு கையெழுத்துப் பிரதிகள், குரானின் கையெழுத்துப் பிரதிகளை விட சிறந்த நிலையில் இருக்கின்றன. சமீப ஆண்டுகளில் குரானைப் பற்றி கேள்விகள் கேட்கின்ற மிகவும் உபயோகமாக உள்ள அறிவுபூர்வ இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவைகள் வேதாகமத்தைக் குறித்து அறிஞர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இணையான அல்லது அதைவிடக் கடினமான கேள்விகளைக் கொண்டிருக்கின்றன.

சில விசுவாசிகள் இஸ்ஸாருல் ஹக்  புத்தகத்திற்கு  நீள பதில்களைத் தயார் செய்து வருகின்றனர். இம்முயற்சியின் நோக்கங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து வேதாகமத்தைத் தற்காப்பது மட்டுமல்ல,மாறாக முஸ்லீம்கள் வெறுமனே பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி வேதாகமத்தை ஒதுக்கி விடாமல் அதை உண்மையிலேயே வாசிக்கும்படி உற்சாகப்படுத்துவதுமாகும்.

ஜெபக்குறிப்புகள்.

வேதாகமத்திற்கு விரோதமாக முஸ்லீம்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் முயற்சிக்காக ஜெபியுங்கள்.

தேவன் இந்த முயற்சிக்காக சரியான புரிந்து கொள்ளுதல்,திறமைகள், தாலந்துகள் மற்றும் இந்த ஊழியத்தில் மிகவும் பலனுள்ளவர்களாய் இருக்கும் சரியான நபர்களை எழுப்பும்படி ஜெபியுங்கள்.

இந்தக் கடினமான இஸ்ஸாரும் ஹக் திட்டத்திற்கு விவாதம் செய்வதற்கான அறிவு ,திறமை மட்டும் இருந்தால் போதாது.மாறாக கிறிஸ்தவ எழுத்தாளர்களுக்கு ‘தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாக எழும்புகிற எல்லாவித தர்க்கங்களையும்,எல்லாவித மேட்டிமைகளையும் நிர்மூலமாக்குவதற்கு’தேவ பெலன் தேவையாயிருக்கிறது. இதற்காக ஜெபியுங்கள். இதன் நோக்கம்’ எந்த எண்ணத்தையும் மேசியாவிற்குக் கீழ்ப்படியப் பண்ணுவதே”(2 கொரி.10:5).

இஸ்ஸாருல் ஹக்கிற்கு முழுமையான பதில் இறுதியாயத் தயாரானவுடன்,அதனை அச்சு மற்றும் ஒலி-ஒளி அமைப்பில் விநியோகிப்பதற்கு சரியான வழிகள் தேவையாயிருக்கிறது.இதற்கு தேவ ஒத்தாசை,கிருபை மற்றும் பண உதவி கிடைக்க ஜெபியுங்கள்.

இந்தியாவின் சில இடங்களில் முஸ்லீம்களோடு விவாதம் செய்து அவர்களது பொய்க்குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்திக் காட்டி வரும் குழுவினர்களுக்காக ஜெபியுங்கள்.

ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள்  IN ENGLISH

http://www.30-days.net/islam/howmuslims/izhar-ul-haqq/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network