கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-6
இந்தியாவின் அன்சாரி மக்கள் சிருஸ்டிகரை சந்திக்க வேண்டியுள்ள கைவினைஞர்கள்.
அரேபியாவில் கி.பி 632 ம் ஆண்டில் முகமது நபி மரித்து 150 ஆண்டுகளுக்குப் பிற்பாடு இஸ்லாமிய இராணுவம், வியாபரிகள் மற்றும் சூஃபி பக்தர்கள் மூலமாக இஸ்லாம் மதமானது இந்திய ஆங்கிலேய ஆட்சி மற்றும் சுதந்திரம் அடையும் வரை முஸ்லீம் இராஜ்யங்கள் 700 ஆண்டுகளாக துணைக்கண்டத்தை ஆண்டு வந்துள்ளன. இன்றைக்கு 15 கோடிக்கும் அதிகமான முஸ்லீம்கள் இந்தியாவில் இருக்கின்றனர்.
உலகிலேயே சந்திக்கப்படாத மக்கள் கூட்டத்தில் மிகப் பெரிய குழுவினராக கிட்டதட்ட 1.6 கோடி மக்கள் தொகை கொண்ட அன்சாரி மக்கள் இருக்கின்றனர்.இந்தியாவிலும் மிகப் பெரிய முஸ்லீம் கூட்ட த்தினராக (1கோடி மக்கள்) இருக்கிறனர். பெரும்பாலான அன்சாரிகள் வட இந்திய மாநிலமான உத்திர பிரதேசத்தில் வசிக்கின்றனர். அதிகமான பேர் உருது மொழி பேசிகின்றனர் ஆனால் பொதுவாகப் பேசப் படுகின்ற போஜ்புரி, வங்காளம், தெலுங்கு மற்றும் குஜராத்தி மொழிகளையும் பேசுகின்றனர்.
அன்சாரி மக்கள் 100% சுன்னி முஸ்லீம்கள் மற்றும் மற்ற மதங்களோடு ஒத்துப்போகும் கிராமிய இஸ்லாமைப் பின் பற்றி வருகின்றனர். இவர்கள் அடிக்கடி “மஸார்” என்று அழைக்கப்படும் முஸ்லீம் துறவியின் கல்லறைக்குச் செல்லுகின்றனர். காரணம் அந்தத் துறவி மனிதனுக்கும் அல்லாவிற்கும் இடையே மத்தியஸ்தம் பண்ண முடியும் என்று நம்புகின்றனர். பல அன்சாரிகள் குரானின் வசனங்களை துணியில் சுற்றியிருக்கும் தாயத்துகளை கழுத்திலும், இடுப்பிலும் அணிந்து கொள்ளுகின்றனர். இந்த தாயத்துகள் அசுத்த ஆவிகளையும், சாபகளையும் விரட்டும் என்று நம்பப்படுகிறது.
பாரம்பரியமாக அன்சாரி மக்கள் ஜவுளித் தொழிலாளர்களாகவும், பட்டுப் புடவை நெசவாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இருப்பினும் பொருளாதாரத் தேவையினிமித்தமாக பல அன்சாரிகள் பித்தளை மற்றும் மரவேலை கைவினைத்தொழிலுக்கும், மற்றும் சிலர் கைவினைத் தொழிலை விட்டுவிட்டு விவசாயிகளாகவும்,சிறு தொழில் செய்பவர்களாகவும் மாறிவிட்டனர்.
நெசவாளர்கள் பெரும்பாலும் இந்து முகவர்கள் முன்பணம், மூலபணம், மூலப்பொருட்களைக் கொடுக்கும் வியாபாரிகளுக்காக வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கஷ்டப்பட்டு உழைக்கின்றனர், சம்பளமோ மிகக் குறைவு மேலும் குடும்பங்கள் வழக்கமாக நெசவுத் தொழிலை சுற்றுக் கொள்லுகின்றனர். எழுத்தறிவின் அளவு குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக மிகக் குறைவாக இருக்கிறது.
தற்கொலைகள்,பட்டினச்சாவுகள், தீராத வியாதிகள் பரவுதல் ஆகியவை நெசவாளர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றன. வேலையினிமித்தம் ஏற்படும் ஆபத்துகளில் சில சுகாதாரமற்ற வேலை இடங்கள் (ஆரோக்கியமான சூழ்நிலை தண்ணீர் மற்றும் சுத்தமான காற்று ஆகியவை இல்லாதிருத்தல்),கண் பார்வை மங்குதல்,நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் ஆகியவைகளாகும். இவர்களது வேலை சம்பந்தமான வியாதிகள் ஆகியவைகளாகும். இவர்களது வேலை சம்பந்தப்பட்ட ஆபத்துகளோடு இணைந்த மற்ற பிரச்சனைகள் சுகாதாரம் மற்றும் ஆரோகிய குறைவுகளாகும். இந்தியாவில் ஏற்படும் 80% சுகாதார பிரச்சனைகளுக்கும், மூன்றில் ஒரு பங்கு சாவுகளுக்கும் காரணம் தண்ணிர் மூலமாகப் பரவும் வியாதிகளே என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சாத்தான் அன்சாரி குடும்பங்களை நிராகரிக்கப்படுதல்,அநீதி, வறுமை மற்றும் மரணம் ஆகியவற்றின் மூலம் அழித்துவிட முயற்சித்தான் ஆனால்,தேவன் அன்சாரிகளது முழு திறமைகளையும் மீட்க விரும்புகின்றார். அன்சாரிகளை சந்திக்க ஆங்காங்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக அன்சாரி முஸ்லீம்கள் மத்தியில் 80 ஐக்கியக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன் ஆனால் இன்னும் செய்யப்பட வேண்டியவைகள் ஏராளமாக இருக்கிறது.
அதிகமான ஊழியர்கள்,குறிப்பாக இந்தியர்கள் இந்த முஸ்லீம் அயலாரை தேவ அன்பினால் சந்திக்க முன்வர ஜெபியுங்கள்.
பட்டுத் தொழிலில் நீதி நிலவவும்,வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கவும், கடன்பட்டிருக்கிற அன்சாரி குடும்பங்கள் வறுமையிலிருந்து வெளிவர ஜெபியுங்கள்.
கல்வி கற்பதற்கான வாய்ப்புகள்,குறிப்பாக பெண் பிள்ளைகளுக்குக் கிடைக்க ஜெபியுங்கள்.
அசுத்த ஆவிகள் மற்றும் மாயையிலும்,இருந்து இவர்களுக்கு விடிதலை கிடைக்க ஜெபியுங்கள்.
இவர்கள் விடுதலையாக்கக் கூடிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்பாடுகள் கிடைக்க ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/asia-south-central/the-ansari-people-of-india/
Leave a Reply