கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் -5
“உன் தலையை உயர்த்து,நீ ஒரு எகிப்தியன்!”
அரேபிய எழுச்சி தொடர்கிறது…….
2011 ம் ஆண்டின் ஜனவரி மாத நிகழ்வுகள் எகிப்திய வரலாற்றில் முக்கியமான ஒன்றாகப் பொறிக்கப்பட்டுள்ளது. பெருபாலும் அமைதியாக நடைபெற்ற புரட்சியின் மூலமாக மக்கள் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஜனாதிபதி முபாரக்கை வலுக்கட்டயமாக ராஜினாமா செய்ய வைத்தனர். இந்த வெற்றிக்குப் பிறகு “உன் தலையை உயர்த்து, நீஒரு எகிப்தியன்” என்பதே கெய்ரோவிலுள்ள தாஹ்ரிர் சதுக்கத்தில் குழமியிருந்த ஆரவார மக்களின் கோஷமாக இருந்தது.இந்த சம்பவம் சரித்திரத்திலே உண்மையான ஒரு புரட்சியாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 8.5 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டிற்கு முன்பாக இருக்கும் சவால்கள் மிகப் பெரியவைகள்.எகிப்தியரில் 50% பேர் 25 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் ;எல்லோரும் கற்பதற்கும், வேலை செய்வதற்கும் இடத்தைத் தேடுகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டிற்கு 1.3% வீதம் உயர்ந்து கொண்டே போகிறது. கடுமையான பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வுக்கு ஏற்ர அளவிற்கு சம்பளம் உயரவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் 15% மாக உள்ளது. பாதிக்கும் மேற்பட்ட மக்கள் படிப்பறிவில்லாதவர்கள்.
கி.பி முதலாம் நூற்றாண்டு முதலே இந்நாடு கிறிஸ்தவ விசுவாசத்தின் பாதிப்பிற்குள்ளாகி வந்திருக்கிறது. இருப்பினும் ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இஸ்லாம் மதம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சக்தியாக மாறியது. 80 இலட்சம் கிறிஸ்துவர்கள் இங்கு வசிக்கின்றனர். எகிப்தில் உள்ள விசுவாசிகளே மத்திய கிழக்கின் மிகப் பெரிய கிறிஸ்தவ சிறுபான்மையினர். இருப்பினும் பொது மற்றும் அரசியல் வாழ்க்கையில் பல பகுதிகளில் இவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர்.அரசாங்க அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும்,இராணுவத்திலும் உயர்ந்த பதவிகளை கிறிஸ்தவர்கள் வகிப்பதே இல்லை. உழைப்பாளிகளின் சந்தையில் பெரும்பான்மையான மதத்தைச் சார்ந்த வேலையாட்களுக்கே முதலிடம். திருச்சபைகளின் செயல்பாடுகள் எல்லாம் சபைகளுக்குச் செந்தமான இடத்திலும், கட்டிடத்திலும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சபைகளைக் கட்டுவதற்கும், பதிவு செய்வதற்கும்,மராமத்து வேலை செய்வதற்கும் அனுமதி கிடைப்பது மிகக் கடினமாக இருக்கிறது. சமுதாயத்தில் வளர்ந்து வரும் இஸ்லாமிய மயமாக்குதல் கிறிஸ்தவ மக்களிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இந்த சவால்களை கிறிஸ்தவர்கள் கீழ்க்கண்டவாறு சந்திக்கின்றனர்.
மதமாறுதல்: ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல் 20,000 பெயர்க்கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் பொருளாதார மற்றும் திருமணக் காரணமாகளுக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறுகின்றனர்.
வெளிநாட்டிற்குக் குடிபெயர்தல்: அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எந்த ஒரு எதிர்காலத்தையும் பார்க்க முடியவில்லை. எனவே மேற்கத்திய நாடுகளுக்கு குடிபெயர்ந்து சென்று விடுகின்றனர். இது உள்ளுர் சபைகளை மிகவும் பலவீனப் படுத்தி விடுகிறது.
தனிமைப்படுத்தப்படுதல்: கிறிஸ்தவர்கள் எகிப்திய சமுதாயத்தினின்று விலக்கிக்கொள்ளும் மனநிலையுடன் இருக்கின்றனர். மற்ற கிறிஸ்தவர்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளுகின்றனர். கூடுமானவரை முஸ்லீம்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்த்து விடுகின்றனர்.
நற்செய்திப்பணி : அதிகம் அதிகமான எகிப்திய கிறிஸ்தவர்களும் சபைகளும் தங்களை சுற்றியுள்ல பெரும்பான்மையான மக்களுக்கு தங்களுக்குள்ள பொறுப்பினை உணர்ந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கிறிஸ்தவரல்லாதவர்கள் மத்தியில் ஊழியம் செய்ய மாற்றுக்கலாச்சார ஊழியத்திற்கென்று எகிப்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். சிலர் அருகாமையிலுள்ள நாடுகளில் பணி புரிகின்றனர்.
எகிப்திய விசுவாசிகளுக்கு பெரிய உற்சாகத்தை அளிக்கின்ற செயற்கைக்கோள் தொலைக்காட்சிக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். இன்டர்நெட், ரேடியோ மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி மூலாமாக ஒலி/ஒளிபரப்படுகின்ற போதனை மற்றும் நற்செய்தியை அளிக்கும் நிகழ்ச்சிகள் நல்ல பலனை அளிக்க ஜெபியுங்கள். எகிப்தில் ஆண்டு தோறும் நடிப்பெறும் பெரிய மற்றும் சிறிய ஜெபக்கூட்டங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். சபைகள் அறுவடைக்கென்று ஆட்களை பயிற்றுவித்து அனுப்ப வேண்டிய தங்களது பொறுப்பினை புரிந்து கொண்டு செயல்பட ஜெபியுங்கள்.நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இஸ்லாமிய மக்களிடையே ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட கிறிஸ்தவர்கள் விருப்பமுடையவர்களாய் இருக்க ஜெபியுங்கல் (அப்.9:10-17).
கிறிஸ்தவர்கள் சமுதாய மற்றும் அரசியல் வாழ்வில் உதவிகரமான மற்றும் வேதாகம அடிப்படையிலான வழிகளில் கலந்து கொள்ள ஜெபியுங்கள் (யோசேப்பு மற்றும் தானியேலின் உதாரணங்களை நினைவில் கொள்ளுங்கள்).
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/north-african/lift-up-your-head-you-are-an-egyptian/
Leave a Reply