கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் 4
நான் ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்து கொண்டேன்
ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்து கொண்டேன் என்று அறிந்திருந்த போதிலும்………..
ஒவ்வொரு நாளும் நான் திருமணம் செய்து கொண்ட நபரின் அருகில் விழிப்பேன்.அவர் ஒரு முஸ்லீம் நான் இயேசுவைப் பின்பற்றுபவன்.நாங்கள் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்த போது, இருவருமே எங்களது மதத்தினைக் கடைபிடிப்பவர்களாக இல்லை,எனவே அது எளிதான தீர்மானமாக இருந்தது. உண்மையிலேயே எங்கள் இரண்டு மதங்களும் பல வழிகளில் ஒன்று போலக் காணப்பட்டன.மேலும் எனது கணவர் அவைகள் இரண்டும் உண்மையிலேயே ஒன்று போலத் தான் என்று என்னை நம்பச் செய்தார்.
நான் ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருந்தாலும்,அவர் தனது இஸ்லாமிய மத செயல்பாடுகளை (திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள்ளேயே) மீண்டும் புதுப்பிக்கத் தீர்மானித்தது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.நாங்கள் பெயரளவிலே பக்தியுள்ளவர்களாய் இருந்தபடியால்,இது எங்களது திருமணசமன்நிலையை முழுவதும் பாதித்து விட்டது. அவர் மாறிவிட்டதற்காக அவர் மீது ஏற்பட்ட கோபம் தவிர,அன்பான,கரிசனையுள்ள என் கணவரை என்னிடமிருந்து திருடிவிட்டு, அதற்கு பதிலாக சட்டங்கள், திட்டங்கள், இரக்கமற்ற சடங்காச்சாரங்கள் ஆகியவற்றின் மீது முழு கவனத்தை செலுத்துகின்ற ஒருவரைத் தந்து விட்டதற்காக அவரது மதத்தின் மீது வெறுப்பும் ஏற்பட்டது. எங்களது காதல் உறவு மோசமான நிலைக்கு நேராகச் செல்லத் தொடங்கியது.
வேடிக்கை என்னவென்றால், இவர் தனது மதத்தின் மீது காண்பித்த திடீர் உற்சாகம் என்னை என் வாழ்வின் மூலத்திற்கு-இயேசுவோடு எனக்கு இருந்த் உறவிற்கு – விரட்டியது.நான் ஒரு கிறிஸ்துவைக் குடும்பத்திலிருந்து வந்தவள்.வளரும் போதே ஞாயிறுபள்ளி, வேதாகம முகாம், ஏன் வேதாகமக் கல்லூரி ஆகியவைகளில் கலந்து கொண்டவள். நான் ஒருதலைவியாகவும் எனது சபையில் முன் மாதிரியாகவும் இருந்தவள்.என் பிரச்சனைதான் என்ன?.ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்-பெருமை. இது எனக்கு நிகழும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவிசுவாசியை மணந்து கொள்வதை மிகவும் எதிர்த்தவள், ஆனால் சில சந்தர்ப்பங்களில் நான் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு திறமைப் பெற்றிருக்கிறோம்.
சமீப நாட்களில்,என் கணவர் எனது மகள் இஸ்லாமிய முறைப்படி தொழுகை செய்ய வேண்டும் என்று விரும்பினால் நான் எவ்வாறு அதை சந்திக்கப் போகிறேன் என்று போராடிக் கொண்டிருக்கிறேன்.அது உடனே நிகழாவிட்டாலும் அது நிகழப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது.எனது மகள் முகமதுவை நபி என்று கூறுவதையோ அல்லது இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுதலிப்பதையோ நான் விரும்பவில்லை. இது ஒரு பிரச்சனையாக மாறுவதற்குள் என் கணவர் மேசியாவை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்.
1பேதுரு 3:1-2 வசனங்கள் எனக்கு பிரயோஜனமாக இருப்பதைக் கண்டு கொண்டேன். தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். இதைப் போன்ற சூழ்நிலைகளைத் தங்கள் குடும்பங்களில் அனுபவித்துக் கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் உலகமெங்கும் இருக்கலாம் அவர்களுக்கு எதுவும் எளிதாக இருப்பதில்லை.
ஜெபக் குறிப்புகள்.
மேலேக் குறிப்படப்பட்டுள்ள சூழ்நிலைகளில் உங்களது நாட்டில்,பகுதியில் அல்லது ஊரில் யாரேனும் இருப்பார்களென்றால் அவர்களுக்காக ஜெபியுங்கள்.
இம்மாதிரி சூழ்நிலைகளில் உள்ளவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுகின்ற சபைகளில் இவர்களுக்கு நல்ல தொடர்பு ஏற்பட ஜெபியுங்கள்.
குழந்தை வளர்ப்பில் ஒற்றுமையும், ஞானமும்,பகுத்தறிவும்,இருவருக்
அவிசுவாசிகளை மணந்து கொண்டுள்ள விசுவாசிகளுக்கு கடவுளின் அன்பைக் குறித்த ஆழ்ந்த ஞானம் அவசியமாயிருக்கிறது. இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு,தங்களது வாழ்க்கைத் துணை இரட்சிப்பை அடைவதற்கு தேவனை நம்புவதற்கான தைரியம் தேவையாயிருக்கிறது.இதற்காக ஜெபியுங்கள்.
எதிர்காலத்தைக் குறித்த பயம் நீங்க ஜெபியுங்கள். எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமற்ற நிலை குறிப்பாக முஸ்லீமை மணந்து கொண்டவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணுகிறதாயிருக்கிறது.இப்படிப்
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/islam/issues/i-married-a-muslim/
Leave a Reply