கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் 3
பிரான்ஸ் நாட்டில் உள்ள அல்சேஸ் நகரின் முஸ்லீம்கள்.
வெளிநாட்டிலிருந்து குடியேறியுள்ள மக்களின் மூன்றாவது பெரிய கூட்டம்,(மக்கள் தொகை கணக்கின்படி அல்ல)பிரான்ஸ்நாட்டின் அல்சேஸ் நகரில் தான் உள்ளது. மேலும்,இவ்விதம் குடியேறிய மக்களில் அதிகமானவர்கள் பிரான்ஸ் நாட்டின் பிரஜைகளாக மாறிவிட்டனர்,அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் ஆவர்.1,20,000 முஸ்லீம்கள் ஜெர்மன் நாட்டோடு கிழக்கு எல்லையாக இருக்கும் அல்சேஸ் பகுதியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மிகப் பெரிய முஸ்லீம் சமுதாயங்கள் முல்ஹவுஸ், மற்றும் ஸ்டிராஸ்பர்கில் காணப்படுகின்றனர். முஸ்ஹவுஸில் நான்கில் ஒருவர் இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்தவர்.வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களில் ஐந்தில் ஒருவர் துருக்கியர்.அல்சேஸிலுள்ள முஸ்லீம்கள் சீரான முறையில் வாழ்கின்றனர்.முன்பு ஏழ்மை நிலையில் இருந்த அவர்களது மசூதிகள் எல்லாம் இப்பொழுது நன்கு கட்டப்பட்ட இஸ்லாமிய மையங்களாக மாறியுள்ளன.குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுள்ள அடிப்படைவாதிகள் முஸ்லீம் சமுதாயத்தில் அவர்களது பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் அதிகமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தாலும், மிஷனரிசங்கங்களே இல்லை.ஆனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு விசுவாசிகள் இங்கு இருக்கின்றனர். அவர்களது சாட்சியின் மூலம் பல முஸ்லீம்கள் மேசியா மீது நம்பிக்கையுடையவர்களாய் மாறியுள்ளனர். சிலர் கிறிஸ்தவ விசுவாசத்தை உள்ளுர் கலாச்சாரத்தின் அடிப்படையில் வெளிப்படுத்துகின்ற ‘ஓயாசிஸ் குழு’ என்ற குழுவில் காணப்படுக்கின்றனர்.
அல்சேஸிலிருந்து ஒரு சாட்சி: நான் அல்ஜீரிய பின்னணியைக் கொண்ட ஒரு சாதாரண முஸ்லீம் குடும்பத்திலிருந்து வருகிறேன். எனது சொந்த நாட்டில் முதல் முறையாக பைபிளைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் குறிப்பில் யோவான் 3:16. வசனத்தால் தொடப்பட்டேன்,அதில் தேவன் அன்பாக இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தேன். நான் பிரான்ஸ் தேசத்தில் படித்துக் கொண்டு இருக்கும் போது மொரோக்கோ நாட்டு பின்னணியிலிருந்து வந்த ஒரு விசுவாசியை சந்தித்தேன்,அவர் என்னை ஒரு ஓயாசீஸ் குழுவிற்கு அழைத்து வந்தார்.அக்குழுவிலிருந்த அங்கத்தினர்களின் சாட்சிகள் என்னை மனந்திரும்பும்படியும்,தேவனிடத்
ஜெபக்குறிப்புகள்
முஸ்லீம் சமுதாயத்தினரிடையே திறந்த வாசல்கள் ஏற்படவும், நல்ல முறையில் கலாச்சாரத்திற்கேற்ற விதத்தில் மாற்றியமைக்கப்பட்ட கிறிஸ்தவ சாட்சி உருவாகவும் ஜெபிக்கவும்.
நகரப் பகுதிகளில் வாலிபர்கள் மத்தியில் பலமான நற்செய்தி முயற்சிகள் எடுக்கப்பட ஜெபியுங்கள்.
அல்சேஸில் 30,000 துருக்கியவர்கள் இருக்கின்றனர். இவர்கள் மத்தியில் பணிபுரிய ஆட்களை எழுப்ப அறுவடைக்கு எஜமான ஆட்களை அனுப்பும்படி ஜெபியுங்கள்.
முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கிறிஸ்தவ சங்கங்கள் உருவாக ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/europe/muslims-in-alsace-france/
Leave a Reply