கீழே உள்ள இரண்டு ஸ்கிரீன் ஸாட்களையும் நாம் பார்வையிடும் பொழுது நமக்கு உறுதியாக ஒரு விசயம் புலப்படும்.
முதல் படத்தில் TNTJ அமைப்பினர் SAN அமைப்புக்கு 18/2/2012 அன்று எழுதிய மிக நீண்ண்ட கடிதத்தில் ஒரு பக்கம்.(அதற்கு SAN பதிலாக அனுப்பிய அதைவிட நீண்ட பதிலுக்கு TNTJ பதில் அளிக்காமல் நழுவி விட்டது தனிக்கதை.)
சரி விசயத்துக்கு வருவோம் இந்த கடித நகலை படித்தால் யார் ஓடியது என்ற ஒரு விவாதம் நடந்தால் அதில் TNTJ வினர் SAN அமைப்பினரே குர்ஆன் விவாதத்தில் இருந்து ஓடியது என்பதை நிச்சயமாக நிரூபிப்போம் என்று சொல்லிவிட்டு அப்படி நிரூபித்துவிட்டால் குர்ஆன் விவாதல் இல்லை என்று உறுதிப்பட கூறியுள்ளதை பார்க்கலாம்( யார் ஓடியது என்ற தலைப்பு குழந்தை தனமானது என்று SAN எடுத்து கூறியவுடன் அந்த விசயத்தில் இருந்து TNTJ வெளியேவந்துள்ளது என்பது புதுக்கதை)
ஆனால் யார் ஓடியது என்ற விவாதத்தில் நிச்சயமாக நிரூபிப்போம் என்று சொன்ன அடுத்த நாளிலேயே ஜீஸஸ் இன்வைட் தளத்தில் குர்ஆன் விவாத(?) வீடியோ எங்கே என்று கேட்டவருக்கு SAN னுடன் யார் ஓடியது? என்ற தலைப்பில் விவாதம் நடந்த பிறகு குர்ஆன் விவாதம் நடக்க வாய்ப்புள்ளது என்று பதில் கூறுவதை இரண்டாவது ஸ்கீரின் ஸாட்டில் காணலாம்.
இதிலிருந்தே அவர்கள் நிச்சயமாக நிரூபிப்போம் என்று சொன்னாலும் உள் மனதில் அந்த நம்பிக்கை இல்லாமலேயே இருந்திருக்கிறார்கள்.ஏன் அப்படி சொல்லுகிறோம் என்றால் ஒரு வேளை யார் ஓடிப்போனது என்ற விவாதம் நடந்திருந்தால், TNTJ வினர் SAN அமைப்புதான் ஓடியது என்று நிரூபித்திருந்தால்(!?!) குர்ஆன் விவாதம் நடைபெற வாய்ப்பில்லாமல் இருக்கும் பொழுது பிஜே அவர்கள் சொன்ன பதிலில் அந்த விவாதம் நடந்த பிறகு குர்ஆன் விவாதம் நடக்க வாய்ப்புள்ளது என்று சொல்லுவதிலிருந்தே SAN அமைப்பு TNTJ அமைப்பே ஓடியது என்று நிரூபித்துவிடும் என்ற சந்தேகம் இருந்துள்ளதை அப்பட்டமாக காட்டுகிறது.
கீழே உள்ள படங்களை பெரிதாக்கி பார்க்கவும்
Leave a Reply