கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.ஆண்டவருடைய பெரிதான கிருபையால் கடந்த சில மாதங்களாக தமிழன் தொலைகாட்சியில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரவு 10:30மணி முதல் 11 மணி வரை கிறிஸ்தவம் ஓர் இனிய அனுபவம் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.அதில் வேதாகமத்துக்கு எதிராக இஸ்லாமிய அறிஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து ஆண்டவரின் சுவிஷேசத்தையும் அறிவித்து வருகிறோம்.இந்த நிகழ்ச்சிகளை பல்லாயிரக்கணக்காண மக்கள் கண்டு பயன்பெற்று வருகிறார்கள்.தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் இணையதளத்தில் பதிவேற்றும்படி அநேகர் கேட்டுக்கொண்டதற்கிணங்க யூடியூப் இணையதளத்திலும்,முக நூலிலும் பதிவேற்றப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுகிறேன்.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Leave a Reply