IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

கேப்டன் அம்ருத்தீன் தலைமையில் இஸ்லாமுக்கு எதிரான பிரச்சார கூட்டம்.

January 30, 2013

 அன்பான நண்பர்களுக்கு தலைப்புக்கு சம்மந்தமான விசயத்துக்கு செல்லும் முன்பாக சில விசயங்களை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இஸ்லாமியர்களின் செயல்பாடு

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையிலும் ,பட்டுக்கோட்டையிலும் கிறிஸ்தவ சபைகளில் உபவாசகூடுகைக்காய் ஆயத்தம் பண்ணப்பட்ட கூட்டங்களில் பாஸ்டர் அப்துல்காதர் என்னும் ஊழியர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதாக நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.

ஏதாவது ஒருவழியில் விளம்பரம் படுத்தி இஸ்லாமியர்கள் மத்தியில் தங்களின் இருப்பை காத்துக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாதினர் உள்ளனர்.ஆகவே அவர்கள் கூட்டம் கூட்டி முஸ்லீகள் இந்த கூட்டத்திற்கு செல்ல கூடாது என்று கட்டுப்பாடு செய்தது மட்டுமல்லாமல் இந்த கூட்டத்தை  காவல்துறையின் உதவியோடு தடைசெய்ய பல முயற்சிகள் எடுத்தும் அதில் அவர்கள் வெற்றிபெற முடியவில்லை. குர்ஆன் பற்றி எதுவும் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது.

இங்கு நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது, அந்த கூட்டங்கள் இஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது இஸ்லாம் மார்கத்தையோ விமர்சிக்கும் கூட்டமல்ல.சாதாரணமாக சபைகளில் நடக்கும் உபவாசக்கூட்டமாகும்.ஆனால் விமர்சனங்கள் வந்தால் தங்கள் மார்க்கம் தாக்குப்பிடிக்காது என்ற பயத்தால் இந்த சாதாரண கூட்டத்தை கூட பொறுக்க முடியாமல் பயந்து அதை தடை செய்ய முயற்சி செய்தனர். இது மிக தைரியசாலிகள் போல காண்பித்தும் உள்ளத்துக்குள் அவர்களுக்கு இருக்கும் பயத்தை வெளிக்காட்டிவிட்டது.

மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் ஹபிபுல்லா தலைமையில் ஒரு கூட்டம் அந்த குறிப்பிட்ட சபைக்கு சென்று பாஸ்டர் அப்துல்காதர் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சம்பவங்களை பற்றிய விவரங்களை உணர்வு இதழில் சில மாற்றங்களுடன் பிரசுரித்து உள்ளனர்.அதனை இங்கு இணைத்துள்ளோம்.

இதில் அந்த கிறிஸ்தவ சபை சார்பாக போடப்பட்டுள்ள நோட்டீசும் அச்சடிக்கப்பட்டுள்ளதை காணலாம்.

இந்த பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் சில விவரங்களை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

1)முஸ்லீம் பெயரில் உள்ள ஒரு போதகர்  கிறிஸ்தவ சபைக்கு பிரசங்கிக்க வந்தால் அது முஸ்லீம்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துமா?!.

இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் அந்த நோட்டீஸில் பாஸ்டர் அப்துல்காதர் என்று தெளிவாக போடப்பட்டுள்ளது.இதை வாசிக்கும் அனைவருக்கும் தெரியும் இவர் முஸ்லீமாக இருந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று.அப்படி இருக்கும் பொழுது இது எப்படி முஸ்லீம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.அதிலும் அந்த நோட்டிஸில் முஸ்லீம்களுக்கான தனிப்பட்ட அழைப்பும் இல்லை.இதையெல்லாம் பார்த்துகூட   குழம்புகிற அளவுக்கு  முஸ்லீம் சமுதாயம் தெளிவில்லாமல் இருக்கிறது என்று இவர்கள் சொல்லவருகிறார்களா?

2)இரண்டாவது அந்த கிறிஸ்தவ போதகர் நான் பெங்களூரை சேர்ந்தவன் என்றும்,என் தாய்,தந்தையர் இன்னும் முஸ்லீகளாகத்தான் இருக்கிறார்கள் என்று சொன்னாதாகவும்.ஆனால் நோட்டீஸில் சென்னை என்று போட்டிருப்பதால் அவர் பொய்யர் என்றும் குற்றம்சாட்டு வைக்கின்றனர்.

தெளிந்த மனதோடு சிந்திக்கின்ற யாராக இருந்தாலும் இவற்றை தெளிவாக வாசித்தால் இவர்களின் அறியாமையை வெளிப்படுகிறது அல்லது ஏதோ ஒன்று எழுதவேண்டும் என்பதற்காக தெளிவாக மக்களை குழப்புகிறவர்கள் என்பதை அறிய முடிகிறது.

உதாரணத்துக்கு சென்னையில் வசிக்க கூடிய ஒருவர் தான் பெங்களூரை சேர்தவர் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கூட இவர்களுக்கு தெரியாதா?அவருடைய தாய் ,தகப்பன் உள்ள ஊர் பெங்களூர்.அவர் அங்கு வாழ்ந்தவர் .ஆனால் தற்பொழுது அவர் சென்னையில் வாழ்ந்துவருகிறார்.மீட்டிங்கில் பிரசங்கிக்க வருகிறவர்களின் பிறந்த அல்லது முன்பு வாழ்ந்த ஊரின் பெயரை நோட்டீஸில் போடமாட்டார்கள்.தற்பொழுது அவர் வாழ்ந்து வருகின்ற ஊரின் பெயரையே குறிப்பிடுவார்கள்.ஒருவேளை இரண்டு மூன்று பேர் ஒரே பெயரில் இருந்தால் வித்தியாசம் தெரிவதற்காக தன்னுடைய சொந்த ஊர் பெயரை தங்களுடைய பெயரோடு கூட இணைத்துக்கொள்ளுவார்கள்.ஆனால் சாதாரண நடைமுறைகளில் அப்படி இல்லை.இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் விமர்சனம் செய்துள்ளார்கள் என்பதை நாம் அறியலாம்.

3)அந்த கிறிஸ்தவ போதகர் உண்மையிலேயே முஸ்லீம் பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டவரா என்ற சந்தேகம் இருந்தால்,அதை நிவர்த்தி செய்ய எவ்வளவோ வழிமுறைகள் உண்டு.சாதாரணமாக முஸ்லீம் பிண்ணனியில் இருந்து கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளுவது குறைவுதான்.அதிலும் ஒருவர் தன்னுடைய பெயரை அப்துல்காதர் என்று பொய்யாக சொல்லி விளம்பர படுத்த முடியுமா?அவரை பொய் என்று சொல்லுவதற்கு முன்னால் அவருடைய அரசாங்க ஐடி ஏதாவதும் இவர்கள் பார்த்தார்களா?அல்லது அவரை  வேறு ஏதாவது பரிசோதனை செய்தார்களா?இது போன்ற அறிவுப்பூர்வமான எந்த செயலையுமே செய்யாமல்,அவருக்கு குர்ஆனின் வசனம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.அதனால் அவர் கள்ள பேர்வழி என்று அவரை விமர்சித்திருக்கும் இவர்கள் எவ்வளவு குறைமதியுடையவர்கள் என்பதை வாசிக்கின்றவர்கள் உணருவார்கள்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர்கள் பலர் பைபிள் வசனங்களை பார்க்காமல் சொல்லக்கூடியவர்கள்.ஏன் டாக்டர் ஜாகிர் நாயக் போன்றவர்கள் பல பைபிள் வசனங்களை மனப்பாடமாக கண்ணை மூடிக்கொண்டு சொல்லுவார்கள்.பைபிள் வசனம் எங்கு உள்ளது என்று தெரிகிறது என்ற காரணத்தினால் அவர்கள் கிறிஸ்தவர்களாகிவிட முடியுமா?அல்லது இன்றைய முஸ்லீம்களில் பெரும்பகுதியினருக்கு குர்ஆனில் எந்த வசனம் எங்கு உள்ளது என்று தெரியாததற்காக அவர்கள்  முஸ்லீகள் இல்லை என்று சொல்லிவிடுவார்களா?

4)அடுத்து ஜஃபருல்லா என்ற சகோதரனுக்கு கிறிஸ்தவத்தை ஏற்றுகொண்டால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக அழைத்துவந்துள்ளனர்.வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய கோடிக்கணக்கான பணங்களை வைத்து பணத்தாசை காட்டி மதமாற்றுவதாகவும் இன்னொரு குற்றச்சாட்டை அந்த பத்திரிக்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் வைத்திருந்திந்தனர்.மேலே அந்த சபையின் படத்தை உணர்வு இதழ் வெளியிட்டு உள்ளது.அந்த படத்தில் உள்ள சபை ஓலைவேயப்பட்ட சபையாக உள்ளது.இந்த சபையினர் ஒருவரை மாற்ற ஒரு லட்சம் கொடுக்க முடியுமா?இது நடைமுறையில் சாத்தியமா?கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.பணத்தாசை காட்டி கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கின்றனர் என்ற பழைய பல்லவியை திரும்ப பாடி  உண்மைகளை மறைக்க முடியாது.பொய்சொல்லுவதை கூட கொஞ்சம் யோசித்து சொல்லவேண்டும் .இப்படி சொல்லி மாட்டிக்கொள்ள கூடாது.

நண்பர்களே, இவைகளை நாம் ஏன் இங்கு எழுதுகிறோம் என்றால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தங்களுக்கு பத்திரிக்கை இருக்கிறது என்ற காரணத்தினால் பொய்களை கூட பல நேரங்களில் உண்மையாக்கிவிட முயற்சிக்கிறார்கள்.அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இது.மேலும் ஒரு இஸ்லாமியர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொள்ள அவர் முழு குரானையும் படித்து கரைத்துக்குடித்துவிட்டு பிறகு பைபிளையும் கரைத்து குடித்துவிட்டு வரவேண்டும் என்றெல்லாம் இல்லை.அவர் ஒன்றுமே அறியாத படிப்பறிவில்லாதவராக இருந்தால் கூட அவருடைய உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் இவைகளே அவரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம்   கொண்டுவந்துவிடும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை பொறுத்தவரை இஸ்லாமியர் ஒருவர் கிறிஸ்துவின் அடியாராக ஊழியம் செய்வதை மனதளவில் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதனால் பல முஸ்லீம்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விடுவார்களோ என்ற பயம் அவர்களை இந்த மீட்டிங்கை தடை செய்ய வேண்டும் என்று சொல்லவைத்துள்ளது.கிறிஸ்தவத்தையும்,பரிசுத்த வேதாகமத்தையும் வாய்க்கு வந்த படி கேவலமான வார்த்தைகளில் விமர்சிக்கும் இவர்கள் சாதாரண விசயத்துக்கே எப்படி பயப்படுகிறார்கள் என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.இவர்களின் எந்த விமர்சனங்களையும் நாகரீகமான முறையிலேயே நம்மால் எதிர்கொள்ள முடியும் என்பதை கடந்த கால வரலாறுகள் உறுதிப்படுத்தியுள்ளது.அந்த அளவுக்கு கிறிஸ்துவின் மார்க்கத்தை குறித்த உறுதிப்பாடு நம்முடைய நெஞ்சங்களில் உள்ளது.ஆனால் அவர்களின் மார்க்கத்தின் ஸ்திரத்தன்மையை குறித்த சந்தேகம் அவர்களுக்கு உள்ளதால்தான் இதுபோன்ற பூச்சாண்டி வேலைகளை காண்பித்து பயமுறுத்தப்பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

கிறிஸ்தவர்களின் செயல்பாடு

சரி,இப்பொழுது தலைப்புக்கு சம்மந்தமான விசயத்துக்கு வருவோம்.கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னை பல்லாவரத்தில் உள்ள இனையம் மஹாலில் வைத்து கிறிஸ்தவ பாஸ்டர்களாக இருந்தவர்கள் பரலோகம் செல்லும் வழியைபற்றிய கூட்டங்கள் நடத்துவதாகவும்,அதில் கலந்துகொள்ளும்படி குறுஞ்செய்தி மூலம் நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அந்த கூட்டத்திற்கான சுவரொட்டியை நீங்கள் கீழே காணலாம்.

இதில் கேப்டன் அம்ருத்தீன் என்பவர் தலைமை தாங்குவதாகவும் மற்றும் சில கிறிஸ்தவ போதகராயிருந்தவர்கள் இஸ்லாமுக்காக சாட்சி சொல்லுவதாகவும் இருந்தது.

இந்த கூட்டத்தை தலைமை தாங்கும் கேப்டன் அம்ருத்தீன் அவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கெதிராக புத்தகங்களை எழுதியுள்ளவர்.அதுமட்டுமல்ல, நமக்கு மற்ற கிறிஸ்தவர்களை போல குதர்க்கமாக கடிதம் எழுதி வாங்கிக்கட்டிகொண்டவர்.நாம் அவருடைய கடிதத்துக்கு கொடுத்த மறுபுக்கு இதுவரை அவர் அளிக்கவில்லை.

கேப்டன் அம்ருத்தீன் நமக்கு அனுப்பிய கடிதமும் நாம் அவருக்கு கொடுத்த மறுப்பும்:மவ்லவி பிஜே அவர்களின் வாதத்தை மறுக்கும் இஸ்லாமிய அறிஞர்

அடுத்ததாக, உமர் பாரூக் என்பவர்.இந்த சகோதரர் கிறிஸ்தவ விசுவாசத்துக்கு எதிராக புத்தகம் எழுதியுள்ளார்.அதுமட்டுமல்ல ஏற்கனவே நம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்.அவரை போலவே எம்.சி.முகமத் என்னும் சகோதரரும் நம்முடைய விசுவாசத்தை விமர்சித்து புத்தகம் எழுதியுள்ள .இவருடனும் நாம் தொலைபேசியில் பேசியுள்ளோம்.இவர்கள் கலந்துகொள்ளும் இந்த சுவரொட்டியை பார்த்தவுடனே அந்த கூட்டத்தில் நம்முடைய பரிசுத்த வேதாகமத்தையும்,நாம் உயிரினும் மேலாக நேசிக்கின்ற நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும் ,நமது பரிசுத்த அப்போஸ்தலர்களையும் விமர்சிக்க போகிறார்கள் என்பதை  அறிந்துகொள்ளலாம்.

 

ஆனால் மேலே கிறிஸ்தவ சபையில் நடந்த சாதாரண உபவாச கூட்டத்துக்கு கூட பயந்து வெட்கப்படும்படியான செயல்களில் இறங்கின தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போல் நாம் செயல்படாமல் அமைதியாக அந்த கூட்டத்திற்கு 25 மேற்பட்டவர்கள் சென்று கலந்துகொண்டோம்.நம்முடைய சகோதர்களில் சிலர் கூட்டம் ஆரம்பிக்கும் பொழுதே அங்கு அமர்ந்திருந்தனர்.அங்கு அறிவிப்பு செய்தவர்கள் கூட்டத்தின் கடைசியில் மாற்று மத சகோதரர்கள் கேள்விகள் கேட்கலாம்.பதில் அளிக்கப்படும் என்று அறிவிப்பு செய்தனர்.

 

கூட்டத்தில் பேசிய பேச்சாளர்கள் இஸ்லாமின் அடிப்படையை கூட தெரியாமல் இஸ்லாமுக்கு எதிராகவே பேசினார்கள்.அவர்கள் பேசிய பேச்சுகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.

 

1)  அல்லாஹ்வை பிதா என்று சொல்லி பிரசங்கித்தார்கள்.இஸ்லாமை பொறுத்தவரை அல்லாஹ்வை,பிதா என்று அழைக்கவே முடியாது.அதற்கு அனுமதியும் இல்லை.இஸ்லாம் அல்லாஹ்வை பிதா என்று ஒத்துகொள்ளுவதும் இல்லை.இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களையே அவர்கள் பேசினார்கள் என்று சொல்லமுடியும்.

 

 

2)அங்கு பேசிய ஒரு நபர் அங்கு அமர்ந்திருக்கும் அனைவருமே கிறிஸ்து என்றும்.முஹம்மது அவர்கள் கூட கிறிஸ்துதான் என்றும் சொல்லி இஸ்லாமிய மக்களையே முகம் சுளிக்கவைத்தார்.

 

 

3)இன்னொருவர்  ஜின்கள் மனிதர்களை பைத்தியம் பிடித்தவர்களாக்குகிறது என்று குர்ஆன் சொல்லுகிறது என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காமல் நுனலும் தன் வாயால் கெடும் என்னும் பழமொழிகேற்ப, தான் பாஸ்டராக இருந்த பொழுது இதுபோன்ற பைத்தியம் பிடித்தவர்கள் மேல் கைகளை வைத்தபோது அந்த பைத்தியம் சுகம் ஆனது என்று சொல்லி சேம்சைட் கோல் போட்டார்.

 

 

4)அடுத்து பேசிய சகோதரர் முஸ்லீம்களில் பிச்சைக்காரர்கள் ஒருவரும் இல்லை எனவும்,கிறிஸ்தவர்களிடம் பல பிரிவுகள் உள்ளது எனவும், இஸ்லாமில் பிரிவுகளே இல்லை எனவும் சொல்லி தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தினார்.

 

5)அடுத்து வந்த நட்சத்திர பேச்சாளர் என்று அழைக்கப்பட்டவர் அப்.பவுல் அவர்கள் அறியாமல் சில தவறுகளை செய்துவிட்டதாகவும், அவர் நிறைய உண்மைகளை பேசியுள்ளதாகவும் ,அவரை தான் தவறு சொல்லப்போவது இல்லை எனவும் சிலவற்றை அறியாமல் அதாவது குர்ஆன் அப்பொழுது இல்லாதபடியினால் அப்படி எழுதிவிட்டார் எனவும் பேசிக்கொண்டிருந்தார்.ஆனால் அவர் தன் பேச்சின் முடிவில்  அப் .பவுலை கடுமையாக சாடி தனக்குதானே முரண்பட்டு கடைசியில் தன்னை இஸ்லாமியர்கள் யாரும் பயன்படுத்திக்கொள்ளுவதில்லை,என்னை தனிமைப்படுத்திவிட்டார்கள் என்று புலம்பியதை பார்க்கும்பொழுது பரிதாபமாக இருந்தது.

 

தொடர்ந்து இவர்கள் பேச்சு இப்படி போய் கொண்டிருக்க,நாமும் கேள்வி நேரத்துக்காக அமைதியாக காத்திருந்தோம். ஆனால் சாக்‌ஷி அமைப்பின் பிரதிநிதிகள் அமர்ந்துள்ளார்கள் என்று அறிந்துகொண்டவுடன் கூட்டத்தை சம்மந்தம்  இல்லாமல் இழுக்க ஆரம்பித்தார்கள்.முடிவில் 9.40 மணிக்கு கேள்வி பதில் எல்லாம் கிடையாது, தொழுகையுடன் கூட்டம் முடியும் என்று அறிவித்துவிட்டார்கள் .

அதுவரை பொறுமையோடு அமர்ந்து பரிசுத்த வேதாகமத்தையும் ,நமது தேவனையும்,அப்போஸ்தலர்களையும் அவர்கள் விமர்சித்ததை  கேட்டுகொண்டிருந்த நாம், கூட்ட உதவியாளர்களிடம் இதுவரை எங்களை கடைசியில் கேள்வி கேட்கலாம் என்று அமரவைத்த நீங்கள் திடீர் என்று இப்படி அறிவிப்பு செய்வது மோசடியாகும்.தயவு செய்து எங்கள் கருத்தை பதிய வைக்க எங்களுக்கு இரண்டு நிமிடங்களாவதும் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் .ஆனால் அவர்கள் நம்முடைய நியாயமான கோரிக்கையையும் நிராகரித்தனர்.ஆனாலும் பரிசுத்த வேதாகமம் கற்றுக்கொடுத்த கண்ணியத்தை காத்துக்கொண்டு நாம் அமைதியாக எழுந்து வெளியேறினோம்.முதலில் கேள்வி-பதில் பகுதி உண்டு என்று சொன்ன இவர்கள் ஏன் இப்படி பயந்துபோய் அதை இரத்து செய்தார்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.நம்முடைய நியாயமான கோரிக்கையை புரிந்துகொண்ட சில இஸ்லாமிய சகோதரர்கள் பேச்சாளர்களை வற்புறுத்தி நமக்கு சமயம் கொடுக்க வேண்டும் என்று கெஞ்சினர்.ஆனால் அவர்களோ அதை கண்டுகொள்ளவே இல்லை.

 

இதில் இரண்டு காரியங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.முதலில் சாதாரணமாக இஸ்லாமியர் ஒருவர் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டு  பரிசுத்த வேதாகமத்தை பற்றி பேசினாலே முஸ்லீம்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்று குய்யோ முய்யோவென்று கூச்சல் போட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

 

அடுத்து நம்முடைய மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகளை பகிரங்கமாக விமர்சிக்கபோகிறார்கள் என்று அறிந்தும் இவர்களால் நம்முடைய கிறிஸ்துவின் மார்க்கத்தை  அசைக்கமுடியாது என்ற தைரியத்தால் அவர்கள் அழைப்பை ஏற்று அவர்கள் கூட்டத்துக்கு சென்று கடைசி வரை அமைதியாக அமர்ந்திருந்து மேடையிலேயே அவர்கள் நிலையை அவர்கள் மாற்றிக்கொண்டு நமக்கு வாய்ப்பு அளிக்காமலேயே கூட்டத்தை முடித்தபோதும்,சில முஸ்லீம் சகோதரர்கள் கூட்ட அமைப்பாளர்களிடம் நமக்காக போராடியதை பார்த்த பொழுது நமது உள்ளம் அவர்களுக்கு நன்றி சொல்லவே செய்தது.நம்முடைய கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசம் இவர்கள் நினைப்பதை போல் குழம்பிபோவதல்ல.அது கன்மலையின் மேல் கட்டப்பட்ட வீட்டை போன்றது.அது இவர்களை போல் எத்தனை ஆயிரம் பேர் வந்து மோதினாலும் அசையாதது.அதனால் இவர்களின் இதுபோன்ற நரித்தனங்களுக்கு நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை.ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் நம்மை பார்த்தவுடன் அவர்களின் செயல்பாடுகள் மாற்றமடைந்த உடனேயே நமக்கு ஒரு பெரிய ஜெயத்தை தேவன் கொடுத்துவிட்டார் என்பதை உண்ர முடிந்தது.கர்த்தர் நல்லவர், அவருக்கே மகிமை உண்டாகட்டும். அல்லேலூயா.

 

Comments

  1. colvin says

    January 31, 2013 at 3:34 AM

    செய்திகளை தொகுத்தளித்த விதம் மிக அருமையாக உள்ளது. இஸ்லாத்தை தழுவிய இந்த சகோதர்களிடம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும்படியான வாய்ப்பை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

    Reply
  2. பாதிமா எஸ்தர் says

    January 31, 2013 at 6:18 AM

    ததஜவின் பயம் நியாயமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால் உபவாச கூட்டத்தின் வல்லமையை நன்றாக புரிந்துவைத்துள்ளார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். ஒரு உபவாச கூட்டத்தில் பாஸ்டர் அப்துல் காதர் இறைசெய்தியை பகிர்ந்துகொள்வதால் இஸ்லாம் எங்கே பாதிக்கப்படபோகிறது என்பது கிறிஸ்தவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உபவாசத்தின் வல்லமையை சாத்தான் நன்கு அறிவான் என்ற உண்மையை மறந்துவிடவேண்டாம். அதனால்தான் காவல்துறையின் உதவியை நாடினார்கள் இந்த இஸ்லாமியர்.
    இந்த சம்பவத்துக்கு சுவை சேர்ப்பதற்காக ஒரு கற்பனை கதாபாத்திரம் வரையப்பட்டுள்ளது. அதுதான் ஜஃபருல்லா என்ற இஸ்லாமிய வாலிபனை மதம் மாற ஒரு இலட்சம் தருவதாக கூறி அழைத்துவந்துள்ளனர் என்ற கதை!
    இதில் சிந்திக்கும் இஸ்லாமியர் யாரும் புரிந்துகொள்வார்கள். இது தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமியரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு சொன்ன பொய் என்பதை. 1. அந்த உபவாசம் கூட்டம் நடந்த சபை கட்டித்தை பார்த்தவுடனேயே இந்த ஜஃபருல்லாவுக்கு அந்த சபையை கட்ட தன்னாலான உதவிகளை செய்துகொடுக்கதான் தோன்றியிருக்கும். காரணம் அது ஒரு குடில் ! (படத்தை நன்றாக அவதானிக்கவும்) 2. இஸ்லாமிய வாலிபர்களின் ஈமான் இவ்வளவு பலவீனமானது என்பதை இஸ்லாமியர் ஏற்றுகொள்வார்களா?

    Reply
  3. பாதிமா எஸ்தர் says

    January 31, 2013 at 6:30 AM

    கேப்டன் அமீருதீன் இவ்வளவு பகிரங்கமாக போஸ்டர் அடித்து கிறிஸ்தவ விசுவாசத்துக்கும் இஸ்லாமிய விசுவாசத்துக்கும் எதிராக பேசுவதை வேடிக்கை பார்த்துகொண்டுதானே இருந்தார்கள் இந்த இந்த பீஜே மத்ஹபுவாதிகள்!
    இதிலிருந்து புரியவில்லையா இவர்களின் நோக்கம் இஸ்லாமியர் சத்தியத்தை அறிந்து கிறிஸ்துவை பின்பற்றுவதை காவல்துறையின் உதவியை நாடியாவது தடுப்பது மட்டுமே தவ்ஹீத் ஜமாதின் நோக்கமாக இருந்துள்ளது. இஸ்லாமியர் தங்களை கிறிஸ்த விரோத அடையாளத்தோடு இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு விரோதமாக பேசினாலும் அல்லாஹு அக்பர் என்றுதான் சொல்வார்கள் இஸ்லாமியர்.

    Reply
  4. Christhunesan says

    February 1, 2013 at 9:06 AM

    மாமியார் உடைத்தால் மண் சட்டி.. மருமகள் உடைத்தால் பொன் சட்டி.. இதுதான் இஸ்லாமியர் ஸ்டைல்… அதுமட்டுமா.. கிறிஸ்தவர்கள் செய்வதை காப்பிஅடிப்பது (அதுதான் ஈ அடிச்சான் காப்பி) செய்வது அவர்களில் ஏமாற்றுதனத்தை காட்டுகிறது. அதுவும் கேள்விகேட்க நேரம் தராதது அவர்களின் பயத்தை காட்டுகிறது

    Reply
  5. CHRISTIAN YOUTH says

    February 2, 2013 at 11:00 AM

    முஸ்லிம்கள் இன்னும் எத்தனை நாடகம் நடத்தினாலும் கிறிஸ்தவத்தின் விசுவாசத்தை அசைக்க முடியாது!கிறிஸ்தவ மார்க்த்தின் வளர்ச்சியையும் தடுக்க முடியாது! கேள்வி பதில் நிகழ்ச்சியை ரத்துசெய்ததிலிருந்தே அவர்களிடம் சத்தியம் இல்லையென்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது!இவர்களுக்குள்ளேயே இத்தனை முரண்பட்ட கருத்துகள் இருக்கிற போது இவர்கள் கிறிஸ்தவர்களுக்கு பரலோக வழியை காட்டப்போகிறார்களாம்?நல்ல காமெடி.,

    Reply
    • samuel swamydas says

      February 6, 2013 at 6:55 AM

      i want this message for me

      Reply
      • Forever says

        August 26, 2014 at 8:45 PM

        I can already tell that’s gonna be super heflpul.

        Reply
  6. CHRISTIAN YOUTH says

    February 8, 2013 at 3:30 PM

    ஏம்பா வெங்கடேசா, கடல் படம் பாத்துட்டு கிறிஸ்துவர் எல்லாம் கொந்தளிச்சு இருகாங்க, நீ என்னன்னா ஒரு அறிக்கை கூட உண் வெப்சைட் விடல, நீ உண்மையான கிறிஸ்துவனா?.

    Reply
  7. Jesus is my king says

    March 6, 2013 at 1:55 PM

    அருமையானவர்களே,

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிகவும் பயத்தில் உள்ளனர்…. ஏனென்டால் இஸ்லாமியர்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்று கொண்டு வருகிறார்கள்…. இஸ்லாமியர்களின் அல்லாவும் நம்முடைய பிதாவும் ஒன்று அல்ல….அடுத்து அல்லாவிற்கு அரபிக் மொழியை தவிர வேறு ஒன்றும் தெரியாது…அவர்களுடைய நூலும் அரபிக் மொழயில் மட்டும் தான் உள்ளது…. இவர்களுக்கு பொறமை என்பது நாம் நம்முடைய தேவனோடு நும்முடைய தேவைகளை நம்முடைய சொந்த மொழியில் சொல்லுகிறோம்….அவர்களுக்கு அவ்வாறு சொல்ல முடிவதில்லை… ஏன் என்டால் அவர்களுக்கு அரபிக் மொழி தெரியாது….அதை மீறி தமிழ் இஸ்லாமியர்கள் ஜெபம் பண்ணினாலும் அல்லாஹ்விற்கு புரியாது… Techical Problem …. என்ன பண்ணுவது….மொழி பெயற்பாளரை அழைத்து வருகிறேன் ….. காத்திருக்கவும் …..நன்றி

    Reply
  8. mohammed sabeek says

    March 20, 2013 at 8:55 AM

    dear bro

    We live like bro & sister in tamiolnadu
    ,, dont post like this for hating some from christianity or islam,,,

    i humbly request this to our bros

    Reply
  9. பாதிமா எஸ்தர் says

    March 20, 2013 at 11:12 AM

    முகமது சபீக், இப்படி செய்தவர்களிடம் சொல்லுங்கள் அப்படி செய்யவேண்டாம் என்று! அவர்கள் கேட்கிறார்களா என்று பார்போம். அதை விட்டு விட்டு, நடந்த சம்பவங்களை தெளிவு படுத்தவேண்டாம் என்பது இஸ்லாத்தின் உண்மை நிலையை மறைக்கசெய்யும் செயலல்லவா?

    Reply
  10. vijayan says

    June 4, 2013 at 4:29 PM

    rev கிரிஷ்துராஜ் @ M C முஹம்மது க்கு initial எப்படி மாறினது மேலும் அவர் அல்லா பற்றி உரையாற்றிய CD வேண்டுவோர் இந்த அலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும் 9865057123

    Reply
  11. Ruban says

    July 27, 2013 at 11:21 AM

    மேலே சொல்லப்பட்ட பாஸ்டர்.அப்துல் காதர் அவர்களை நான் என் வாலிப நாட்களிலிருந்து தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 17 வருடங்களாக அறிந்திருக்கிறேன். அவர் தற்பொழுது கிறிஸ்தவத்தை தழுவி நல்ல சாட்சியுள்ள இயேசுவின் ஊழியனாக வாழும் ஒரு முன்னாள் முஸ்லீம். அவர் ஒரு திருச்சபை போதகராகவும் இருக்கிறார். அவரை குறித்து இஸ்லாமிய நண்பர்கள் (பயத்தினால்) சொன்ன அத்தனையும் பொய்யானதே. அவர் இஸ்லாத்தை தாக்குபவரல்ல. மாறாக இயேசுவை உயர்த்துகிறவர்.

    Reply
    • Margery says

      August 27, 2014 at 4:42 AM

      It was dark when I woke. This is a ray of suishnne.

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network